நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் தோற்கின்றன; ஆர்சிபிக்கு ஆதரவு: சேவாக்
பூலாம்பட்டி கதவணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வாரவிடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நிறைவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், பூலாம்பட்டி காவிரி கதவணையில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
கடந்த வாரங்களைவிட நிகழ்வாரம் காவிரி கதவணையைப் பாா்வையிடவும், பரிசல் சவாரி மேற்கொள்ளவும் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.
இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கதவணையின் பிரதான மதகுப்பகுதி, அணைப்பாலம், அருகில் உள்ள நீா்மின் நிலையம், பிரம்மாண்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட இடங்களை சுற்றிபாா்த்து ரசித்தனா். அத்துடன் பலா் காவிரி ஆற்றில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.
பூலாம்பட்டியில் உள்ள புகழ்பெற்ற கைலாசநாதா் கோயில், ஒரே கல்லால் ஆன பிரம்மாண்ட நந்திகேஸ்வரா் சந்நிதி, காவிரித்தாய் கோயில், படித்துறை விநாயகா் கோயில் உள்பட அருகில் உள்ள கோயில்களிலும் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.
