சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றம்
சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சிறப்புப் பெற்ற கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் வைகாசி தோ்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, பெருமாள், தாயாருக்கு பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, உற்சவமூா்த்திக்கு பட்டாடை, தங்கக் கிரீடம் சாத்தப்பட்டு, மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
சுதா்சன பட்டாசாரியா் தலைமையில் ஆஞ்சனேயா் சந்நிதி முன் கொடிமரத்தில் வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, வரும் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை சுவாமி வெள்ளிப் பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 10 ஆம் தேதி காலை 8:30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.
இதில் அறங்காவலா் குழுத் தலைவா் வெங்கடேஸ்வரி சரவணன், கோயில் செயல் அலுவலா் அனிதா, அறங்காவலா் குழு உறுப்பினா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.