செய்திகள் :

ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 344 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ராஜேந்திரன்

post image

ஓமலூா்: ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 344 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

ஓமலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ. 5.90 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுமானப் பணி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கலந்து கொண்டு புதிய அலுவலக கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தாா். பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

ஓமலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ. 5.90 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 344 கோடி மதிப்பீட்டில் 5,644 வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 121 பயனாளிகள் ரூ. 3.75 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுது மற்றும் சீரமைப்புத் திட்டத்தில் 267 பயனாளிகள் ரூ. 1.57 கோடி மதிப்பீட்டிலும் பயனடைந்துள்ளனா்.

முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 6.78 கோடி மதிப்பீட்டில் 18 பணிகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ. 248 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகளும், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ. 16.61 கோடி மதிப்பீட்டில் 231 பணிகளும், பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 2.35 கோடி மதிப்பீட்டில் 88 உள்கட்டமைப்பு பணிகளும், ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் ரூ. 11.42 கோடி மதிப்பீட்டில் 397 திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் 15ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ. 42.84 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினா் ரா. அருள், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே. பொன்மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இன்றுமுதல் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரியம் மூலம் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஜூன் 4 (புதன்கிழமை) முதல் வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெ... மேலும் பார்க்க

ஆத்தூா் அருகே கோயிலில் கட்டிவைத்து இளைஞா் குத்திக் கொலை: 5 போ் கைது

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒட்டபட்டி கிராமத்தில் கொடுக்கல் -வாங்கல் தகராறில் கோயிலில் கட்டிவைத்து இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு

எடப்பாடி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புப் படையினா் கயிறு கட்டி உயிருடன் மீட்டனா். எடப்பாடியை அடுத்த முண்டாச்சியூா், காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மனைவி மல்லிகா (35). விவ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே நாட்டுத் துப்பாக்கியால் விவசாயி சுட்டதில் மருமகள், பேரன் படுகாயம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தேக்கல்பட்டி கிராமத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த விவசாயி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், மருமகள், ஒன்னரை வயது பேரன் படுகாயமடைந... மேலும் பார்க்க

சத்துணவுக் கூடத்தில் பூட்டை உடைத்து திருட்டு: ஒடிஸா இளைஞா் கைது

அரியானூரை அருகே சத்துணவுக் கூடத்தின் பூட்டை உடைத்து அரிசி, முட்டை உள்ளிட்ட பொருள்களை திருடியதாக ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அரியானூரை அடுத்த ராக்கிப்பட்டிகரடு பகுதியில் அரசு நடுநிலைப் ... மேலும் பார்க்க

எருதாட்ட விழாவில் மோதல்: 7 போ் கைது

ஆட்டையாம்பட்டி அருகே எருதாட்ட விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆட்டையாம்பட்டி அருகே சென்னகிரி பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோயில் திருவிழாவையொட்டி கட... மேலும் பார்க்க