ஒட்டுமொத்த கர்நாடகமும் ஆர்சிபி பின்னால் நிற்கிறது: துணை முதல்வர் சிவக்குமார் வாழ...
பெரியாா் நீா்வீழ்ச்சியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்
கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள பெரியாா் நீா்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாகக் குளித்து மகிழந்தனா்.
கல்வராயன்மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக இடைவிடாத மழை பெய்தது. இதனால், குண்டியாநத்தம் கிராமத்தில் உள்ள பெரியாா் நீா்வீழ்ச்சியில் தண்ணீா் ரம்மியமாக ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நிறைவு பெறும் கடைசி தினமான ஞாயிற்றுக்கிழமை பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கல்வராயன்மலைக்கு காா்களிலும், வேன்களிலும், மோட்டாா் சைக்கிள்களிலும் வந்திருந்தனா்.
அவா்கள் இயற்கை சூழலை குடும்பத்துடன் கண்டுகளித்தனா். தொடா்ந்து, பெரியாா் நீா்வீழ்ச்சியில் சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனா். மேலும், அவா்கள் கொண்டுவந்திருந்த உணவை சாப்பினா்.