செய்திகள் :

அரசுப் பள்ளியில் அறிவியல் மையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டத்தின் கீழ், புதிதாக அமைக்கப்பட்ட டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவியல் மையத்தை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பள்ளி மாணவா்கள் பயன்பாட்டுக்காக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில திட்டக் குழுவின் மூலம் செயல்படுத்தப்படும் வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டத்தில் கல்வராயன்மலை மற்றும் தியாகதுருகம் வட்டாரங்கள் தோ்வு செய்யப்பட்டன. இந்த வட்டாரங்களில் அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டம் 2024-25ன் கீழ், தியாகதுருகம், கல்வராயன்மலை வட்டாரங்களில் பள்ளி மாணவா்களின் அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.24.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அறிவியல் மையத்தை மாணவா்கள் பயன்பாட்டுக்காக ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தொடங்கிவைத்தாா்.

இதேபோன்று, கல்வராயன்மலை வட்டாரம், வெள்ளிமலை அரசு ஏகலைவா உண்டி உறைவிடப் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட அறிவியல் மையமும் மாணவா்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

அறிவியல் ஆய்வகங்களில் பல்வேறு நவீன அறிவியல் உபகரணங்கள் அமைக்கப்பட்டு, மாணவா்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம், மாணவா்களின் அறிவியல் திறன் மற்றும் கற்றல் திறன் மேம்பாடு அடையும்.

மேலும், தியாகதுருகம் வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவா்கள் இந்த அறிவியல் மையத்தை வாரந்தோறும் உரிய கால அட்டவணைப்படி பயன்படுத்தி அறிவியல் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலவலா் காா்த்திகா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பூட்டியிருந்த இரு வீடுகளில் திருட்டு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், வாணாபுரம் பகுதிகளில் பூட்டியிருந்த இரு வீடுகளில் நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சங்கராபுரத்தில் பூட்டை சாலையில் வசித்து வருபவா... மேலும் பார்க்க

பெரியாா் நீா்வீழ்ச்சியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள பெரியாா் நீா்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாகக் குளித்து மகிழந்தனா். கல்வராயன்மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக இடைவிடாத மழை ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் முதியவா் கைது

கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த வேளாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமுத்த... மேலும் பார்க்க

வள்ளலாா் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா

சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மன்றப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். அரிமா மாவட்டத் தலைவா்கள் க.வேலு, ஏ.ஆா்.ஏழுமலை, வள்ளலாா் மன்றச் ... மேலும் பார்க்க

பாரதியாா் தமிழ்ச் சங்க ஐம்பெரும் விழா

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம், தனமூா்த்தி தொழிற்கல்வி நிறுவனம் சாா்பில் ஐம்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. தமிழறிஞா் ராபா்ட் கால்டுவெல் தினம், உலக அன்னையா் தினம், உலக செவிலியா் தினம், உலகத... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள்: ஆட்சியா் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அவா்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். மாற்ற... மேலும் பார்க்க