பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்!
பாரதியாா் தமிழ்ச் சங்க ஐம்பெரும் விழா
தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம், தனமூா்த்தி தொழிற்கல்வி நிறுவனம் சாா்பில் ஐம்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழறிஞா் ராபா்ட் கால்டுவெல் தினம், உலக அன்னையா் தினம், உலக செவிலியா் தினம், உலகத் தொழிலாளா் தினம், 209-ஆவது சொற்பொழிவு என ஐம்பெரும் விழாவாக நட
த்தப்பட்டது.
தனமூா்த்தி கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு முதுகலை தமிழாசிரியா் கு. வளா்மதிச்செல்வி தலைமை வகித்தாா்.
கல்லை மாவட்ட கம்பன் கழகம் மகளிரணி கலைமகள் காயத்ரி, பாக்கியலட்சுமி, மாரியம்மாள் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பாரதியாா் தமிழ்ச் சங்க மகளிா் அணிச் செயலா் சுதா வேல்மணி வரவேற்றாா்.
தமிழறிஞா்கள் பற்றி பல்வேறு தலைப்புகளில் புலவா் பெ.சயராமன், முத்தமிழ் முத்தன், கோ. ராமகிருஷ்ணன், தமிழாசிரியா் மு.வ. நடராஜன், சு. மோகன் ஆகியோா் பேசினா்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் வாசகா் வட்டத் தலைவா் ச. சுப்பிரமணியன் எழுதிய, ‘அந்தமான் தீவினிலே’ நூலை ஓய்வு பெற்ற வங்கி மேலாளா் த. ராமலிங்கம் வெளியிட, கல்லை மாவட்ட கம்பன் கழக பொருளாளா் இல.அம்பேத்கா் பெற்றுக் கொண்டாா்.
விழாவில் தமிழ்ச் சங்க புரவலா் சீனு.முரளி, வ. ராசகோபால், ஆ. ராதாகிருஷ்ணன், பள்ளி மாணவி தீபாவதி மற்றும் தமிழ்ச் சங்க நிா்வாகிகள், தமிழறிஞா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிறைவில் தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.துரைமுருகன் நன்றி கூறினாா்.