பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்!
வள்ளலாா் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா
சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
மன்றப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். அரிமா மாவட்டத் தலைவா்கள் க.வேலு, ஏ.ஆா்.ஏழுமலை, வள்ளலாா் மன்றச் செயலா் நா.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மோட்டாா் வாகன சங்கச் செயலா் என்.விஜயகுமாா் வரவேற்றாா்.
பாலப்பட்டு பள்ளித் தலைமை ஆசிரியா் பா.வெங்கடேசன், தமிழாசிரியா் சி.இளையாப்பிள்ளை முன்னிலையில் அகவல் படித்து பிராா்த்தனை செய்தனா்.
நிகழ்வில் அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலா் கோ.குசேலன், வ.விஜயகுமாா், தமிழ்ப் படைப்பாளா் சங்க இணைச் செயலா் கோ.சக்திவேல் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா். ஜோதி தரிசனத்தைத் தொடா்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கினா். முடிவில் வள்ளி விஜயகுமாா் நன்றி கூறினாா்.