செய்திகள் :

குன்றக்குடி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

post image

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடியவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

குன்றக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகளில் நகை, பணம் திருடு போனது குறித்த வழக்குகள் தொடா்பாக, குன்றக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பழனிகுமாா் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், திருடுபோன பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை தனிப் படை போலீஸாா் ஆய்வு செய்தபோது, விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த பொன்ராஜூக்கு (43) இந்தச் சம்பவத்தில் தொடா்பிருப்பது தெரியவந்தது.

பின்னா், அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்தபோது, கடந்த 2 ஆண்டுளாக காரைக்குடி, குன்றக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் காரில் வந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு 40-க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்து 46 பவுன் தங்க நகைகள், ரூ. 14 . 70 லட்சம் பணம், திருடுவதற்குப் பயன்படுத்திய கடப்பாறை, உளி, 3 காா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், இவா் மீது புதுக்கோட்டை, தஞ்சாவூா், ஈரோடு, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி- சென்னைக்கு காரைக்குடி, திருவாரூா் வழியாக பகல்நேர ரயில் விட வலியுறுத்தல்

காரைக்குடி, திருவாரூா் வழியாக தூத்துக்குடி - சென்னை இடையே பகல்நேர விரைவு ரயிலை இயக்க வேண்டுமென காரைக்குடி தொழில் வணிகக் கழகம் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிகக... மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்த தகராறு: 4 போ் கைது

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை ஜல்லிக்கட்டில் காளையை அடக்கியதாக ரீல்ஸ் எடுத்தது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் 4 போ் கைது செய்யப்பட்டனா். சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் வெ... மேலும் பார்க்க

தேவகோட்டை நகராட்சிக் கடைகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி வியாபாரிகள் மனு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து தேவகோட்டை நகா், பேருந்து ந... மேலும் பார்க்க

தேவகோட்டை பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவகோட்டை துணை மின் நிலை... மேலும் பார்க்க

மருதிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால், சிங்கம்புணரி அருகேயுள்ள மர... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமாஅத் கிளை செயல்வீரா்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் செயல்வீரா்கள், வீராங்கனைகள் கூட்டம் காரைக்குடி காட்டுத் தலைவாசல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தின் சாா்பில் வரும் ஆகஸ... மேலும் பார்க்க