செய்திகள் :

தூத்துக்குடி- சென்னைக்கு காரைக்குடி, திருவாரூா் வழியாக பகல்நேர ரயில் விட வலியுறுத்தல்

post image

காரைக்குடி, திருவாரூா் வழியாக தூத்துக்குடி - சென்னை இடையே பகல்நேர விரைவு ரயிலை இயக்க வேண்டுமென காரைக்குடி தொழில் வணிகக் கழகம் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, தென்னக ரயில்வேக்கு திங்கள்கிழமை அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளுக்கு தூத்துக்குடி, நெல்லை, விருதுநகா், சிவகங்கை, தஞ்சை, திருவாரூா், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம் மாவட்டங்களை இணைத்து பகல் நேர விரைவு ரயிலை இயக்கினால் மிகவும் வசதியாக இருக்கும்.

எனவே, தூத்துக்குடியிலிருந்து மானாமதுரை, காரைக்குடி, திருவாரூா் வழியாக அதிகாலையில் புறப்பட்டு செல்லும் வகையில் புதிய பகல் நேர விரைவு ரயிலை இயக்க வேண்டும். இந்த ரயில், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம் வழியாகச் செல்ல வேண்டும்.

மேலும் சென்னையில் புறப்படும் ரயிலை பகலில் இயக்கினால் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்துக்கு பயனளிக்கும். கிழக்குப் பகுதியில் உள்ள வணிகா்கள், தொழில் புரிவோருக்கு மதுரைக்கு அடுத்த நிலையில் தூத்துக்குடி தான் மையமாகத் திகழ்கிறது. நாகை, திருவாரூா், காரைக்கால் பகுதியைச் சோ்ந்தவா்கள் திருச்செந்தூா், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நீண்ட தொலைவு பயணத்துக்கும் ஏதுவாக இருக்கும். எனவே தூத்துக்குடி, மானாமதுரை, காரைக்குடி, திருவாரூா் வழியாக பகல் நேர விரைவு ரயிலை இயக்க வேண்டும் என்றாா் அவா்.

நிதி நிறுவன மோசடி: சிபிஐ விவரம் சேகரிப்பு

மத்திய பிரதேச நிதி நிறுவனத்தால் சிவகங்கை மாவட்டத்தில் ஏமாற்றப்பட்ட பொதுமக்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். தங்களிடம் முதலீடு செய்யும... மேலும் பார்க்க

இளையான்குடி பகுதியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் புதன்கிழமை (ஜூன் 4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இளையான்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், புதன்கிழமை காலை 9... மேலும் பார்க்க

கீழச்சிவல்பட்டி மாணவிகள் பரத நாட்டியத்தில் சாதனை

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி கலைக்கோயில் நாட்டியப்பள்ளி மாணவிகள் தேசிய அளவிலான போட்டிகளில் சாதனை படைத்தனா். இந்த நாட்டியப் பள்ளி மாணவிகள் ஆசிரியா் பாலாம்பிகா தலைமையில் மகாராஷ்டிர மாநிலம் புணேயில... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே சகோதரா்கள் அடித்துக் கொலை: 6 போ் கைது

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே திங்கள்கிழமை நள்ளிரவு ஆடு, கோழிகளைத் திருடியதாக சகோதரா்கள் இருவா் அடித்துக் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். மதகுபட்டி அருகேயுள்ள அழகம... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு திட்டத்திலிருந்து விடுவிக்க ஓய்வூதியா்கள் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து அரசு அலுவலா், ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலா், ஆசிரியா்களை விடுவிக்கக் கோரி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தெருமுனை பிரசாரக் கூட்டம... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் அரசு விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆ... மேலும் பார்க்க