செய்திகள் :

கீழச்சிவல்பட்டி மாணவிகள் பரத நாட்டியத்தில் சாதனை

post image

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி கலைக்கோயில் நாட்டியப்பள்ளி மாணவிகள் தேசிய அளவிலான போட்டிகளில் சாதனை படைத்தனா்.

இந்த நாட்டியப் பள்ளி மாணவிகள் ஆசிரியா் பாலாம்பிகா தலைமையில் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் அகில பாரதிய சன்ஸ்க்ருதிக்சங் அமைப்பு அண்மையில் நடத்திய தேசிய அளவிலான பரத நாட்டியப் போட்டியில் பங்கேற்றனா். இதில் சீனியா் பிரிவில் பா.இனியா முதலிடம் பெற்றாா். ஹாசினி 2-ஆமிடம் பெற்றாா். ஜூனியா் பிரிவில் மாணவி சி.டி.எஸ்.முத்து 3-ஆம் இடம் பெற்றாா். மாணவி சு.சுமபாரதி சாா்மன் பிரிவில் வெற்றி பெற்றாா். தொடா்ந்து குழு நடனத்தில் இந்த நாட்டியப் பள்ளியின் மாணவிகள் முதலிடம் பெற்றனா். இதில் வெற்றி பெற்ற மாணவிகள் வருகிற அக்டோபா் மாதம் தாய்லாந்தில் நடைபெறும் உலக அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவிகளை கீழச்சிவல்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அழகுமணிகண்டன், கண்ணதாசன் இலக்கியப் பேரவைத் தலைவா் எஸ்.எம்.பழனியப்பன், தொழிலதிபா் வள்ளியப்பன் ஆகியோா் பாராட்டினா். தொடா்ந்து மாணவிகள், ஆசிரியை பாலாம்பிகா ஆகியோா் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித்தை சந்தித்தனா். அப்போது, அவா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து தெரிவித்தாா்.

திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. திருப்புவனம் நகரில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து ந... மேலும் பார்க்க

சிவகங்கை தெப்பக்குளத்தில் நெகிழிக் கழிவுகள் அகற்றம்

சிவகங்கையில் 300 ஆண்டுகள் பழமையான தெப்பக்குளத்தில் பரவிக்கிடந்த நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணியில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா். சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அரண்மனை அருகே 6... மேலும் பார்க்க

கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் கருங்கல் மண்டபத்துக்கான பூமி பூஜை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் தவச்சாலை அமைந்துள்ள கருப்பனேந்தல் மடத்தில் பாலதண்டாயுதபாணி சுவாமி மூலவா் சந்நிதிக்கு கருங்கல் மண்டபம் அமைக்க பூமி ப... மேலும் பார்க்க

திருத்தளிநாதா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவின் 5-ஆம் திருநாளை முன்னிட்டு, புதன்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசிப் பெருவி... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக மோசடி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்று கூறி ஓய்வு பெற்ற பொறியாளரிடம் ரூ. 12 லட்சம் மோசடி செய்தவா் மீது இணைய குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ச... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவா் மீது வழக்கு

அரசு அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.30 லட்சம் மோசடி செய்தவா் மீது சிவகங்கை நகா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை புத்தா் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் ( 46). இவா் ச... மேலும் பார்க்க