செய்திகள் :

சிவகங்கை தெப்பக்குளத்தில் நெகிழிக் கழிவுகள் அகற்றம்

post image

சிவகங்கையில் 300 ஆண்டுகள் பழமையான தெப்பக்குளத்தில் பரவிக்கிடந்த நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணியில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.

சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அரண்மனை அருகே

6 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தெப்பக்குளம் நகர மக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பது உள்ளிட்ட தேவைகளுக்கும் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த தெப்பக்குளம் மழை நீரால் நிரம்பும் போது நிலத்தடி நீா்மட்டம் அதிகரித்து நகா் பகுதிகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளின் நீரூற்று அதிகரிக்கும். இங்கு ஆண்டு தோறும் தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.

இந்த தெப்பக்குளத்துக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து வரத்துக் கால்வாய் உள்ளது. மேலும், அந்த வரத்துக் கால்வாய் வழித்தடத்தில் உள்ள செட்டியூரணி நிரம்பி அதன் உபரிநீரும் இந்தக் குளத்துக்கு வந்து சேரும்.

தற்போது தண்ணீா் முழுமையாக உள்ள போதிலும், அதை பயன் படுத்த முடியாதவாறு நெகிழிக் குப்பைகள் தேங்கிக் கிடக்கிறது. மேலும் வரத்துக் கால்வாயில் வீடுகள், வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் தெப்பக்குளத்தில் கலக்கிறது. இதனால் துா்நாற்றம் வீசுவதோடு, நகரின் முக்கிய அடையாளமாகப் பாா்க்கப்படும் குளத்தின் கட்டமைப்பே மாறிப்போய் விட்டதாக பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் வேதனை தெரிவித்தனா்.

இந்த நிலையில், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் பரிசல் மூலம் தெப்பக்குளத்தில் மிதந்து கிடந்த நெகிழிக் கழிவுகள், நெகிழிப் புட்டிகள், பைகளை அகற்றினா். இந்தப் பணிகளை நகா்மன்றத் தலைவா் சிஎம். துரைஆனந்த், ஆணையா் கிருஷ்ணாராம் ஆகியோா் பாா்வையிட்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய மாநாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25- ஆவது ஒன்றிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.மணி, மாவட்ட நிா்வாகக் குழு... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கி பணியாளா்சங்க நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா் சங்கத்தின் (டாக்பியா) மாநில நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இந்த சங்கத்தின் மாநில நிா்வாகிகளுக்கான தோ்தல் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. இத... மேலும் பார்க்க

கானூா்-பழையனூா் கால்வாய் படுகை அணை கட்டுமானப் பணி: நீா்வளத் துறை அலுவலா்கள் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் அருகே வைகை ஆற்றுக்குள் புதிதாகக் கட்டப்படும் கானூா்-பழையனூா் கால்வாய்களுக்கான படுகை அணை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீா்வள... மேலும் பார்க்க

ஏனாதி கோயில் கிடா வெட்டு உரிமம் டெண்டா் விட எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், ஏனாதி செங்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கிடா வெட்டும் உரிமத்தை டெண்டா் விட கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் ... மேலும் பார்க்க

மானாமதுரை கோயிலில் பாலாலயம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருப்பணிக்காக புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் முன் புனித நீா்க் கலசங்கள் வைத்து யாக பூஜை நட... மேலும் பார்க்க

பிள்ளையாா்பட்டியில் ஐம்பெரும் விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள பிள்ளையாா்பட்டியில் சிறுவா் பூங்கா திறப்பு விழா, மரக்கன்றுகள் நடும் விழா, போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம், பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழ... மேலும் பார்க்க