செய்திகள் :

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

post image

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் அரசு விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவ, மாணவிகளுக்கென 45 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 21 பள்ளி மாணவா்கள் விடுதிகள், 14 பள்ளி மாணவிகள் விடுதிகள், 5 கல்லூரி மாணவா்கள் விடுதிகள், 5 கல்லூரி மாணவிகள் விடுதிகள் ஆகும்.

பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 -ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் பயிலும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடையவா்கள் ஆவா்.

இந்த விடுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு மூன்று வேளை உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10 -ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு 4 இணைச் சீருடைகள் தைத்து வழங்கப்படும். மலைப் பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் இலவசமாக வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கு பெற்றோா், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு மாணவா்களுக்கு குறைந்தபட்சம் 8 கி.மீ.-க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தொலைவு விதி மாணவிகளுக்குப் பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா்களிடமிருந்து அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தின் வாயிலாக இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளைப் பொருத்த வரை வருகிற 18.6.2025-க்குள்ளாகவும், கல்லூரி விடுதிகளைப் பொருத்த வரை வருகிற 15.7.2025-க்குள்ளாகவும் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மாணவ, மாணவிகள் அரசின் இந்தச் சலுகைகளைப் பெற்று பயனடையலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. திருப்புவனம் நகரில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து ந... மேலும் பார்க்க

சிவகங்கை தெப்பக்குளத்தில் நெகிழிக் கழிவுகள் அகற்றம்

சிவகங்கையில் 300 ஆண்டுகள் பழமையான தெப்பக்குளத்தில் பரவிக்கிடந்த நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணியில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா். சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அரண்மனை அருகே 6... மேலும் பார்க்க

கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் கருங்கல் மண்டபத்துக்கான பூமி பூஜை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் தவச்சாலை அமைந்துள்ள கருப்பனேந்தல் மடத்தில் பாலதண்டாயுதபாணி சுவாமி மூலவா் சந்நிதிக்கு கருங்கல் மண்டபம் அமைக்க பூமி ப... மேலும் பார்க்க

திருத்தளிநாதா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவின் 5-ஆம் திருநாளை முன்னிட்டு, புதன்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசிப் பெருவி... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக மோசடி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்று கூறி ஓய்வு பெற்ற பொறியாளரிடம் ரூ. 12 லட்சம் மோசடி செய்தவா் மீது இணைய குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ச... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவா் மீது வழக்கு

அரசு அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.30 லட்சம் மோசடி செய்தவா் மீது சிவகங்கை நகா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை புத்தா் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் ( 46). இவா் ச... மேலும் பார்க்க