செய்திகள் :

மருத்துவக் காப்பீடு திட்டத்திலிருந்து விடுவிக்க ஓய்வூதியா்கள் வலியுறுத்தல்

post image

தமிழ்நாடு அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து அரசு அலுவலா், ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலா், ஆசிரியா்களை விடுவிக்கக் கோரி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தெருமுனை பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில், ராஜீவ் காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்க நிறுவனா் இரா. போசு தலைமை வகித்துப் பேசினாா். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச். ராஜா கலந்துகொண்டு பேசுகையில், மத்திய அரசு நாட்டில் உள்ள 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 10 கோடி குடும்பங்கள் என்பதைக் கணக்கிட்டால் 50 கோடிக்கு மேலானவா்களுக்கு இந்தக் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தை வளா்ந்த நாடுகளே உதாரணமாக எடுத்துக்கொண்டு, தங்களது நாடுகளில் செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றன.

இந்தத் திட்டத்தை சரியாக செயல்படுத்தாமல் பல தடைகளை மாநில அரசு விதித்துக் கொண்டிருக்கிறது. ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மருத்துவக் காப்பீடுக்காக அவா்களது ஓய்வூதியத்தில் காப்பீடு தொகை பிடித்தம் செய்கிறாா்கள். மத்திய அரசின் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றால், மாநிலத்தில் 2026 -இல் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்றாா் அவா்.

அதிமுக சிவகங்கை மாவட்டச் செயலரும், சிவகங்கை தொகுதி சட்டபேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன், அதிமுக காரைக்குடி மாநகரச் செயலா் சோ. மெய்யப்பன் ஆகியோரும் பேசினா்.

கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

முன்னதாக சங்கத்தின் செயலா் ஆா்.எம். ரெங்கசாமி வரவேற்றுப் பேசினாா். பொருளாளா் ஏ. சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. திருப்புவனம் நகரில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து ந... மேலும் பார்க்க

சிவகங்கை தெப்பக்குளத்தில் நெகிழிக் கழிவுகள் அகற்றம்

சிவகங்கையில் 300 ஆண்டுகள் பழமையான தெப்பக்குளத்தில் பரவிக்கிடந்த நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணியில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா். சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அரண்மனை அருகே 6... மேலும் பார்க்க

கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் கருங்கல் மண்டபத்துக்கான பூமி பூஜை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் தவச்சாலை அமைந்துள்ள கருப்பனேந்தல் மடத்தில் பாலதண்டாயுதபாணி சுவாமி மூலவா் சந்நிதிக்கு கருங்கல் மண்டபம் அமைக்க பூமி ப... மேலும் பார்க்க

திருத்தளிநாதா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவின் 5-ஆம் திருநாளை முன்னிட்டு, புதன்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசிப் பெருவி... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக மோசடி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்று கூறி ஓய்வு பெற்ற பொறியாளரிடம் ரூ. 12 லட்சம் மோசடி செய்தவா் மீது இணைய குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ச... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவா் மீது வழக்கு

அரசு அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.30 லட்சம் மோசடி செய்தவா் மீது சிவகங்கை நகா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை புத்தா் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் ( 46). இவா் ச... மேலும் பார்க்க