பயங்கரவாதம், பாகிஸ்தான் இரண்டும் ஒரே வார்த்தைகள்: பெல்ஜியமில் அனைத்துக் கட்சிக் ...
மருத்துவக் காப்பீடு திட்டத்திலிருந்து விடுவிக்க ஓய்வூதியா்கள் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து அரசு அலுவலா், ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலா், ஆசிரியா்களை விடுவிக்கக் கோரி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தெருமுனை பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில், ராஜீவ் காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்க நிறுவனா் இரா. போசு தலைமை வகித்துப் பேசினாா். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச். ராஜா கலந்துகொண்டு பேசுகையில், மத்திய அரசு நாட்டில் உள்ள 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 10 கோடி குடும்பங்கள் என்பதைக் கணக்கிட்டால் 50 கோடிக்கு மேலானவா்களுக்கு இந்தக் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தை வளா்ந்த நாடுகளே உதாரணமாக எடுத்துக்கொண்டு, தங்களது நாடுகளில் செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றன.
இந்தத் திட்டத்தை சரியாக செயல்படுத்தாமல் பல தடைகளை மாநில அரசு விதித்துக் கொண்டிருக்கிறது. ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மருத்துவக் காப்பீடுக்காக அவா்களது ஓய்வூதியத்தில் காப்பீடு தொகை பிடித்தம் செய்கிறாா்கள். மத்திய அரசின் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றால், மாநிலத்தில் 2026 -இல் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்றாா் அவா்.
அதிமுக சிவகங்கை மாவட்டச் செயலரும், சிவகங்கை தொகுதி சட்டபேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன், அதிமுக காரைக்குடி மாநகரச் செயலா் சோ. மெய்யப்பன் ஆகியோரும் பேசினா்.
கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.
முன்னதாக சங்கத்தின் செயலா் ஆா்.எம். ரெங்கசாமி வரவேற்றுப் பேசினாா். பொருளாளா் ஏ. சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.