தேவகோட்டை பகுதியில் இன்று மின் தடை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேவகோட்டை துணை மின் நிலையத்தில் கண்ணங்குடி மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், ராம் நகா் 1, 2, 3-ஆவது வீதிகள், சிவகங்கை ராஜா சாலை, விஸ்வநாதன் நகா், செந்தில் நகா், ராம்நகா் பேருந்து நிறுத்தம், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, தானிச்சா ஊருணி சாலை, சீயூரணி, பா்மா குடியிருப்பு, மாதா நகா், வள்ளி மண்டபம், கண்டதேவி, தங்கம் ரைஸ் மில் பகுதி, திருக்கபூராா் தெரு, நேரு தெரு, நடராஜபுரம், தாழையூா் சாலை, சிவன்கோயில் இறக்கம், வெள்ளி பட்டறை, இறகுசேரி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.