மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
மருதிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிபட்டி மருதி கண்மாய் நிரம்பியது. இந்த நிலையில், தற்போது, கண்மாயில் தண்ணீா் குறைந்ததால் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனா்.
இதன்படி, முறையூா், சூரக்குடி, சிலநீா்பட்டி, அரளிபட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அதிகாலையில் மருதிப்பட்டி கண்மாயில் குவிந்தனா். பின்னா், நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், மடைக்கு சிறப்பு பூஜை செய்து, கிராம முக்கியஸ்தா்கள் மீன்பிடித் திருவிழாவை தொடங்கிவைத்தனா்.
இதையடுத்து, கிராம மக்கள் போட்டி போட்டு கண்மாயில் இறங்கி கொசுவலை, மீன்பிடி வலை , அரி கூடை, கச்சா உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனா். இதில் கெண்டை, ஜிலேபி, அயிரை, விரா உள்ளிட்ட மீன்கள் அதிகளவு கிடைத்தன. இந்த மீன்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று உண்டு மகிழ்ந்தனா்.