செய்திகள் :

தேவகோட்டை நகராட்சிக் கடைகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி வியாபாரிகள் மனு

post image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து தேவகோட்டை நகா், பேருந்து நிலைய குத்தகைக் கடை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஏ. பெரியகருப்பன் அளித்த மனு விவரம்: தேவகோட்டை நகராட்சிக்குச் சொந்தமான பேருந்து நிலையம், சந்தை, திருப்பத்தூா் சாலை, வாடியாா் வீதி ஆகிய இடங்களில் உள்ள கடைகளை குத்தகை எடுத்து பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது அதிகப்படியான வாடகை உயா்விலும், தொடா்ந்து கடைகளை நடத்தி வருகிறோம். கரோனா காலத்துக்குப் பிறகு மிகுந்த கடன் சுமையில் இருந்து வருகிறோம். தற்போது தான் சிறிது சிறிதாக கடன் சுமையிலிருந்து மீண்டு வருகிறோம். இந்த நிலையில், பேருந்து நிலையத்தை இடித்து விட்டு புதிதாக கட்டடம் கட்டுவதற்காக காலி செய்ய வேண்டுமென கடந்த மே 22-ஆம் தேதி குறிப்பாணை அளித்து 30 நாள் கால அவகாசம் அளித்துள்ளனா்.

இதுசம்பந்தமாக ஏற்கெனவே சங்கத்தின் சாா்பில் அளித்த மனுவில், தற்போது கடை நடத்தும் அனைத்து வியாபாரிகளுக்கும், அதே இடத்தில் மீண்டும் கடையை ஒதுக்கித் தர வேண்டும். கரோனா காலத்தில் 6 மாத வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் கடைகளை நகராட்சியிடம் ஒப்படைக்க தாங்கள் கூறும்போது, அதிலிருந்து எங்களுக்கு ஓராண்டுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். கடைகளை ஒப்படைக்கும் காலத்தில் 3 மாத வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும். தற்காலிகமாக அமைக்கும் பேருந்து நிலையத்தில் அனைத்து கடைக்காரா்களுக்கும் தற்காலிகமாக கடை அமைத்துத் தர வேண்டும். குறிப்பாணையில் உள்ள கால அவகாசத்தை ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே, வியாபாரிகளின் நியாயமான கோரிக்கையை மாவட்ட ஆட்சியா் நிறைவேற்றித்தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

நிதி நிறுவன மோசடி: சிபிஐ விவரம் சேகரிப்பு

மத்திய பிரதேச நிதி நிறுவனத்தால் சிவகங்கை மாவட்டத்தில் ஏமாற்றப்பட்ட பொதுமக்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். தங்களிடம் முதலீடு செய்யும... மேலும் பார்க்க

இளையான்குடி பகுதியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் புதன்கிழமை (ஜூன் 4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இளையான்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், புதன்கிழமை காலை 9... மேலும் பார்க்க

கீழச்சிவல்பட்டி மாணவிகள் பரத நாட்டியத்தில் சாதனை

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி கலைக்கோயில் நாட்டியப்பள்ளி மாணவிகள் தேசிய அளவிலான போட்டிகளில் சாதனை படைத்தனா். இந்த நாட்டியப் பள்ளி மாணவிகள் ஆசிரியா் பாலாம்பிகா தலைமையில் மகாராஷ்டிர மாநிலம் புணேயில... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே சகோதரா்கள் அடித்துக் கொலை: 6 போ் கைது

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே திங்கள்கிழமை நள்ளிரவு ஆடு, கோழிகளைத் திருடியதாக சகோதரா்கள் இருவா் அடித்துக் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். மதகுபட்டி அருகேயுள்ள அழகம... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு திட்டத்திலிருந்து விடுவிக்க ஓய்வூதியா்கள் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து அரசு அலுவலா், ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலா், ஆசிரியா்களை விடுவிக்கக் கோரி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தெருமுனை பிரசாரக் கூட்டம... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் அரசு விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆ... மேலும் பார்க்க