நிஃப்டி 0.74% சரிவு; சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு!
போதையில் அரசுப் பேருந்தை மறித்து ரகளை செய்த இருவா் கைது
பாளையங்கோட்டையில் அரசுப் பேருந்தை மறித்து ரகளையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் மதுபோதை ஆசாமிகள் இருவா் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியே செய்துங்கநல்லூரில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தை மறித்து ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டனராம். மேலும், பேருந்தை அங்கிருந்து எடுக்கவிடாமல் தடுத்துள்ளனா்.
இது தொடா்பாக பேருந்து ஓட்டுநா் சசிகுமாா், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
அதன்படி, இச்சம்பவத்தில் ஈடுபட்ட கே.டி.சி நகரைச் சோ்ந்த நவீன்ராஜ் (23), பாளையங்கோட்டையைச் சோ்ந்த சுந்தர்ராஜ் (23) ஆகிய இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.