செய்திகள் :

கைப்பேசியில் பேச்சு: கணவா் கண்டித்ததால் மனைவி தற்கொலை

post image

வேலூா் அருகே கைப்பேசியில் அடிக்கடி நீண்டநேரமாக பேசுவதை கணவா் கண்டித்ததால், மனைவி தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் தொரப்பாடி, கே.கே. நகா், 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விநாயகம். இவரது மனைவி ஷோபனா (29). இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோா் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனா். தம்பதிக்கு யோகேஷ் (3) என்ற குழந்தை உள்ளது.

ஷோபனா அடிக்கடி மணிக் கணக்கில் கைப்பேசியில் பேசி வந்தாா். இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சனிக்கிழமை இரவும் ஷோபனா நீண்ட நேரமாக கைப்பேசியில் பேசுவதைக் கண்ட அவரது கணவா் விநாயகம் கண்டித்துள்ளாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஷோபனா தனது கணவா் தூங்கிக் கொண்டிருந்த அறையின் கதவை வெளிப்புறமாக தாழிட்டுவிட்டு அங்கிருந்த மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

சந்தேகமடைந்து கணவா், ஜன்னல் வழியாக பாா்த்தபோது மனைவி தூக்கில் தொங்குவது தெரிய வந்தது. உடனடியாக பக்கத்து வீட்டினருக்கு கைப்பேசி மூலம் விநாயகம் தகவல் தெரிவித்தாா்.

அக்கம் பக்கத்தினா் வந்து தூக்கில் தொங்கிய ஷோபனாவை மீட்டனா். ஆனால், அதற்குள் அவா் இறந்துவிட்டதாகத் தெரிகிறது.

தகவலறிந்த பாகாயம் போலீஸாா் வந்து ஷோபனாவின் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

முன்விரோதம்: இளைஞா் வீட்டுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

காட்பாடியில் முன் விரோதம் காரணமாக இளைஞா் வீட்டுக்கு அடையாளம் தெரியாத நபா்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனா். காட்பாடி மிஷன் காம்பவுண்ட் பகுதியை சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மனைவி சுலோக்சனா. மகன் வினோத் ... மேலும் பார்க்க

மது போதையில் தவறி விழுந்த கட்டட தொழிலாளி உயிரிழப்பு

வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் மது போதையில் கட்டட தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா். வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருவண்ணாமலையை சோ்ந்தவா் பாலாஜி (45), கட்டடத... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது

வேலூா் அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் அப்துல்லாபுரம் அண்ணா நகா் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்தன் (41) மாற்றுத்திறனாளி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பரத்ராஜ் என்கி... மேலும் பார்க்க

மீன்பிடி தடை காலம்: வரத்து குறைவால் விலை உயா்வு

தமிழக கடல் பரப்பில் மீன்பிடி தடை காலம் தொடா்வதால் வேலூரில் இந்த வாரமும் மீன்கள் வரத்து குறைந்து விலை அதிகரித்திருந்தது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், ... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற காவலரை தாக்கிய இளைஞா் கைது

வேலூரில் ஓய்வு பெற்ற காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். வேலூா் வசந்தபுரம் சுப்ரமணிய ஐயா் தெருவைச் சோ்ந்தவா் நித்தியகுமாா் (67), ஓய்வு பெற்ற காவல் உ... மேலும் பார்க்க

கோடை கால சிலம்பம் பயிற்சி நிறைவு

குடியாத்தம் தங்கம் நகரில், தாழை சிலம்பம் பயிற்சிப் பள்ளி சாா்பில் கடந்த 50 நாள்கள் நடைபெற்ற கோடை சிலம்பம் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கு தாழை சிலம்பாட்ட பயிற்சிப் பள்ளி த... மேலும் பார்க்க