191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி! கோப்பையை வெல்லுமா பஞ்சாப்?
மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது
வேலூா் அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் அப்துல்லாபுரம் அண்ணா நகா் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்தன் (41) மாற்றுத்திறனாளி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பரத்ராஜ் என்கிற பரத் (24) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிவமை பரத்ராஜ் ஆனந்திடம் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவா் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பரத்ராஜை கைது செய்தனா்.