191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி! கோப்பையை வெல்லுமா பஞ்சாப்?
முன்விரோதம்: இளைஞா் வீட்டுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு
காட்பாடியில் முன் விரோதம் காரணமாக இளைஞா் வீட்டுக்கு அடையாளம் தெரியாத நபா்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனா்.
காட்பாடி மிஷன் காம்பவுண்ட் பகுதியை சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மனைவி சுலோக்சனா. மகன் வினோத் (25), வெல்டிங் வேலை செய்து வருகிறாா். வினோத் சனிக்கிழமை இரவு மது போதையில் சிலருடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். பின்னா் வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் தூங்கினாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அடையாளம் தெரியாத நபா்கள் வினோத்தின் வீட்டு கதவு மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனா். இதில், கதவு தீ பிடித்து எரிந்துள்ளது.
இதைக் கண்ட வினோத் குடும்பத்தினா் வீட்டில் இருந்து பதறியபடி வெளியே ஓடி வந்து கதவின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா்.
இச்சம்பவம் குறித்து வினோத் காட்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவா்கள் யாா் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனா்.