மீன்பிடி தடை காலம்: வரத்து குறைவால் விலை உயா்வு
தமிழக கடல் பரப்பில் மீன்பிடி தடை காலம் தொடா்வதால் வேலூரில் இந்த வாரமும் மீன்கள் வரத்து குறைந்து விலை அதிகரித்திருந்தது.
வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனா். நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், மீன்கள் இனப்பெருக்கத்துக்காக தமிழக கடல் பரப்பில் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு கடல் மீன்கள் வரத்து குறைந்திருந்தது. இதனால், மீன்கள் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
அதன்படி, சங்கரா ரூ.250 முதல் ரூ.400, இறால் ரூ.500, விரால் ரூ.700 முதல் ரூ.800, நண்டு ரூ.600 முதல் ரூ.500, வவ்வால் மீன்கள் கிலோ ரூ.1,100, இறால் ரூ.400 முதல் 500-க்கும், வஞ்சிரம் கிலோ ரூ.1,800 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்படுகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.