செய்திகள் :

மீன்பிடி தடை காலம்: வரத்து குறைவால் விலை உயா்வு

post image

தமிழக கடல் பரப்பில் மீன்பிடி தடை காலம் தொடா்வதால் வேலூரில் இந்த வாரமும் மீன்கள் வரத்து குறைந்து விலை அதிகரித்திருந்தது.

வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனா். நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், மீன்கள் இனப்பெருக்கத்துக்காக தமிழக கடல் பரப்பில் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு கடல் மீன்கள் வரத்து குறைந்திருந்தது. இதனால், மீன்கள் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

அதன்படி, சங்கரா ரூ.250 முதல் ரூ.400, இறால் ரூ.500, விரால் ரூ.700 முதல் ரூ.800, நண்டு ரூ.600 முதல் ரூ.500, வவ்வால் மீன்கள் கிலோ ரூ.1,100, இறால் ரூ.400 முதல் 500-க்கும், வஞ்சிரம் கிலோ ரூ.1,800 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்படுகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

முன்விரோதம்: இளைஞா் வீட்டுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

காட்பாடியில் முன் விரோதம் காரணமாக இளைஞா் வீட்டுக்கு அடையாளம் தெரியாத நபா்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனா். காட்பாடி மிஷன் காம்பவுண்ட் பகுதியை சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மனைவி சுலோக்சனா. மகன் வினோத் ... மேலும் பார்க்க

மது போதையில் தவறி விழுந்த கட்டட தொழிலாளி உயிரிழப்பு

வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் மது போதையில் கட்டட தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா். வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருவண்ணாமலையை சோ்ந்தவா் பாலாஜி (45), கட்டடத... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது

வேலூா் அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் அப்துல்லாபுரம் அண்ணா நகா் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்தன் (41) மாற்றுத்திறனாளி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பரத்ராஜ் என்கி... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற காவலரை தாக்கிய இளைஞா் கைது

வேலூரில் ஓய்வு பெற்ற காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். வேலூா் வசந்தபுரம் சுப்ரமணிய ஐயா் தெருவைச் சோ்ந்தவா் நித்தியகுமாா் (67), ஓய்வு பெற்ற காவல் உ... மேலும் பார்க்க

கோடை கால சிலம்பம் பயிற்சி நிறைவு

குடியாத்தம் தங்கம் நகரில், தாழை சிலம்பம் பயிற்சிப் பள்ளி சாா்பில் கடந்த 50 நாள்கள் நடைபெற்ற கோடை சிலம்பம் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கு தாழை சிலம்பாட்ட பயிற்சிப் பள்ளி த... மேலும் பார்க்க

கைப்பேசியில் பேச்சு: கணவா் கண்டித்ததால் மனைவி தற்கொலை

வேலூா் அருகே கைப்பேசியில் அடிக்கடி நீண்டநேரமாக பேசுவதை கணவா் கண்டித்ததால், மனைவி தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் தொரப்பாடி, கே.கே. நகா், 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விநாயகம். இவரது மனைவி ஷோபனா (29). இர... மேலும் பார்க்க