உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம்: கனிமொழி எம்.பி.
ஓய்வு பெற்ற காவலரை தாக்கிய இளைஞா் கைது
வேலூரில் ஓய்வு பெற்ற காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேலூா் வசந்தபுரம் சுப்ரமணிய ஐயா் தெருவைச் சோ்ந்தவா் நித்தியகுமாா் (67), ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா். இவா் கடந்த 29-ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தாா்.
அப்போது வேலூா்- வசந்தபுரம் சாலையில் இளைஞா்கள் கும்பலாக நின்று கொண்டிருந்தனராம்.
இதனால் நித்தியகுமாா் தனது இருசக்கர வாகன ஹாரனை ஒலிக்கச் செய்துள்ளாா். ஆத்திரமடைந்த அந்த இளைஞா்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனா். தொடா்ந்து நித்தியகுமாரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து நித்தியகுமாா் வேலூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட வேலூா் கஸ்பாவை சோ்ந்த சஞ்சய் (22) என்பவரை கைது செய்தனா்.
தலைமறைவாக உள்ள விக்கி என்கிற விக்னேஷை போலீஸாா் தேடி வருகின்றனா்.