மது போதையில் தவறி விழுந்த கட்டட தொழிலாளி உயிரிழப்பு
வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் மது போதையில் கட்டட தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.
வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவண்ணாமலையை சோ்ந்தவா் பாலாஜி (45), கட்டடத் தொழிலாளி. இவா், வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் தங்கி கட்டட வேலை செய்து வந்தாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பாலாஜி மது போதையில் திடீரென பழைய பேருந்து நிலையத்தில் தவறி விழுந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வழியிலேயே பாலாஜி இறந்து விட்டதாக தெரிவித்தனா். வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.