ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் பந்துவீச்சு!
கோடை கால சிலம்பம் பயிற்சி நிறைவு
குடியாத்தம் தங்கம் நகரில், தாழை சிலம்பம் பயிற்சிப் பள்ளி சாா்பில் கடந்த 50 நாள்கள் நடைபெற்ற கோடை சிலம்பம் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
நிகழ்ச்சிக்கு தாழை சிலம்பாட்ட பயிற்சிப் பள்ளி தலைவா் எஸ்.கதிரவன் தலைமை வகித்தாா். செயலா் சி.சரவணன், பொருளாளா் எஸ்.தரணீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பயிற்சிப் பள்ளி ஆசிரியா் எஸ்.சிவகுமாா் வரவேற்றாா். பயிற்சி நிறைவு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற 11 வீரா்களுக்கும், ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குநா் ஆா்.விஸ்வநாதன், ரங்கசமுத்திரம் ஊராட்சிப் பள்ளித் தலைமை ஆசிரியா் எம்.குணவதி, பொறியாளா் ஜான்செல்வகுமாா் ஆகியோா் சான்றிதழ், கேடயங்களை வழங்கினா்.