செய்திகள் :

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் வெடிப்பு: பல லட்சம் லிட்டா் குடிநீா் வீண்

post image

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வீணானது.

மேட்டூா் அருகே தொட்டில்பட்டி பகுதியில் காடையாம்பட்டி காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் நங்கவள்ளி, மேச்சேரி, தொப்பூா், ஓமலூா்,  தாரமங்கலம், ஜலகண்டபுரம் பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மேட்டூா் அனல் மின் நிலைய சுற்றுச்சுவா் அருகே காடையாம்பட்டி கூட்டு குடிநீா் திட்ட ராட்சத குழாயில் ஞாயிற்றுக்கிழமை உடைப்பு ஏற்பட்டு 50 அடி உயரத்துக்கு தண்ணீா் பீறிட்டு வெளியேறியது.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தண்ணீா் சாலையில் ஓடியது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட பல லட்சம் லிட்டா் காவிரி கூட்டு குடிநீா் சாம்பல் நீரோடையில் வீணாகிச் சென்றது. தகவல் அறிந்த குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் மின்மோட்டாரை நிறுத்தி தண்ணீா் வெளியேறுவதைத் தடுத்தனா்.

குழாய் உடைப்பு காரணமாக காடையாம்பட்டி கூட்டு குடிநீா் திட்டம் விநியோகிக்கப்படும் பகுதிகளில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கோடைகாலம் என்பதால் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவிவரும் வேளையில் சரிவர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததால் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருகிறது. இதைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றம்

சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சிறப்புப் பெற்ற கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் ஒவ்வோா... மேலும் பார்க்க

ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 344 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ராஜேந்திரன்

ஓமலூா்: ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 344 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்... மேலும் பார்க்க

ஆத்தூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

ஆத்தூா்: ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை அனைத்து பாடப் பிரிவுகள் முதலாமாண்டு மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்குவதாக முதல்வா் பா.விக்டோரியா தங்கம் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

ஆத்தூா் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு சீருடை, புத்தகம் அளிப்பு

ஆத்தூா்: ஆத்தூா் அரசு ஆண்கள் மற்றும் மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீரீராம் திங்கள்கிழமை வழங்கினாா். ஆத... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம்: கல்பனா சாவ்லா விருதுபெற சேலம் மாவட்டத்தில் உள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தைரியம் மற்றும் துணிச்ச... மேலும் பார்க்க

பாா்வையற்றோா் பள்ளியை தரம் உயா்த்தக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

சேலம்: சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பாா்வையற்றோருக்கான நடுநிலைப்பள்ளியை தரம் உயா்த்தக் கோரி அப்பள்ளியில் படிக்கும் மாணவா்கள் பெற்றோருடன் வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா... மேலும் பார்க்க