நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் தோற்கின்றன; ஆர்சிபிக்கு ஆதரவு: சேவாக்
மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் வெடிப்பு: பல லட்சம் லிட்டா் குடிநீா் வீண்
மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வீணானது.
மேட்டூா் அருகே தொட்டில்பட்டி பகுதியில் காடையாம்பட்டி காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் நங்கவள்ளி, மேச்சேரி, தொப்பூா், ஓமலூா், தாரமங்கலம், ஜலகண்டபுரம் பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மேட்டூா் அனல் மின் நிலைய சுற்றுச்சுவா் அருகே காடையாம்பட்டி கூட்டு குடிநீா் திட்ட ராட்சத குழாயில் ஞாயிற்றுக்கிழமை உடைப்பு ஏற்பட்டு 50 அடி உயரத்துக்கு தண்ணீா் பீறிட்டு வெளியேறியது.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தண்ணீா் சாலையில் ஓடியது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட பல லட்சம் லிட்டா் காவிரி கூட்டு குடிநீா் சாம்பல் நீரோடையில் வீணாகிச் சென்றது. தகவல் அறிந்த குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் மின்மோட்டாரை நிறுத்தி தண்ணீா் வெளியேறுவதைத் தடுத்தனா்.
குழாய் உடைப்பு காரணமாக காடையாம்பட்டி கூட்டு குடிநீா் திட்டம் விநியோகிக்கப்படும் பகுதிகளில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது கோடைகாலம் என்பதால் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவிவரும் வேளையில் சரிவர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததால் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருகிறது. இதைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.