செய்திகள் :

சரிவில் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

post image

பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,465.69 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11:44 மணி நிலவரப்படி 279.41 புள்ளிகள் குறைந்து 81,353.62 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 87.70 புள்ளிகள் குறைந்து 24,745.90 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக், டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, பாரதி ஏர்டெல், சன் பார்மா, டாடா ஸ்டீல், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2 சதவீதம் வரை சரிந்துள்ளன.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.2 சதவீதம், 0.25 சதவீதம் சரிந்தன. துறைகளில் நிஃப்டி மெட்டல் 1.5 சதவீதம், நிஃப்டி ஐடி 0.96 சதவீதம், நிஃப்டி ஆட்டோ 0.96 சதவீதம் சரிவடைந்துள்ளன.

அதேநேரத்தில் எட்டர்னல், பஜாஜ் பின்சர்வ், ஹெச்டிஎப்சி, கோல் இந்தியா உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளன.

இரண்டு நாள்கள் சரிவுக்குப் பிறகு நேற்று ஏற்றத்துடன் பங்குச்சந்தை வர்த்தகம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | நல்லவர், நம்பிக்கையானவர், ஊழலற்றவரைத் தேர்ந்தெடுங்கள்: விஜய்

டாடாவின் பட்ஜெட்-ஃப்ரீ கார்! புதுப்பிக்கப்பட்ட அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்!

டாடா நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பம்பர், கதவின் கைப்பிடிகளிலும் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. டாடாவின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக... மேலும் பார்க்க

வார இறுதியில் தங்கம் வாங்கலாமா? இதோ தங்கம் விலை நிலவரம்!

சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி, ஒரு சவரன் தங்கம் ரூ.71,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.மே 26ஆம் தேதி இந்த வாரம் தொடங்கிய போது, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.71,600க்கு வ... மேலும் பார்க்க

வங்கி மோசடி வழக்குகள் குறைந்தன! ஆனால் சந்தோஷப்பட ஒன்றுமில்லை!! ஏன்?

கடந்த 2023-24ஆம் நிதியாண்டைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டில் வங்கி மோசடி வழக்குகள் குறைந்துள்ளன என்று ஆர்பிஐ ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.ஆனால், வங்கி மோசடி வழக்குகள்தான் குறைந்திருக்கிறதே தவிர, கடந்த நித... மேலும் பார்க்க

இன்டெல் மணியின் கடனளிப்பு 69% உயா்வு

முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான இன்டெல் மணியின் கடனளிப்பு கடந்த நிதியாண்டில் 69 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கட... மேலும் பார்க்க

அந்நிய நேரடி முதலீடு 934 கோடி டாலராகக் குறைவு

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு கடந்த மாா்ச் காலாண்டில் 934 கோடி டாலராகக் குறைந்துள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:2024-25-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் 24.5 சதவ... மேலும் பார்க்க

ரயில்வேயிடமிருந்து ரூ.140 கோடி ஆர்டரை வென்ற டெக்ஸ்மாக்கோ!

கொல்கத்தா: டெக்ஸ்மாக்கோ ரயில் அண்டு பொறியியல் லிமிடெட், பல்நோக்கு வேகன்களை வழங்குவதற்காக ரயில்வேயிடமிருந்து ரூ.140.55 கோடி மதிப்புள்ள ஆர்டரை பெற்றுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.புதிதாக உருவாக்க... மேலும் பார்க்க