சரிவில் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?
பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,465.69 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11:44 மணி நிலவரப்படி 279.41 புள்ளிகள் குறைந்து 81,353.62 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 87.70 புள்ளிகள் குறைந்து 24,745.90 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக், டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, பாரதி ஏர்டெல், சன் பார்மா, டாடா ஸ்டீல், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2 சதவீதம் வரை சரிந்துள்ளன.
நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.2 சதவீதம், 0.25 சதவீதம் சரிந்தன. துறைகளில் நிஃப்டி மெட்டல் 1.5 சதவீதம், நிஃப்டி ஐடி 0.96 சதவீதம், நிஃப்டி ஆட்டோ 0.96 சதவீதம் சரிவடைந்துள்ளன.
அதேநேரத்தில் எட்டர்னல், பஜாஜ் பின்சர்வ், ஹெச்டிஎப்சி, கோல் இந்தியா உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளன.
இரண்டு நாள்கள் சரிவுக்குப் பிறகு நேற்று ஏற்றத்துடன் பங்குச்சந்தை வர்த்தகம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | நல்லவர், நம்பிக்கையானவர், ஊழலற்றவரைத் தேர்ந்தெடுங்கள்: விஜய்