செய்திகள் :

மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! திமுகவினர் உற்சாக வரவேற்பு!

post image

திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மதுரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திமுக பொதுக் குழு கூட்டம் நாளை( ஜூன் 1) மதுரையில் நடைபெறுகிறது. இதற்காக உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் அண்ணா அறிவாலயம் முகப்பு போன்று வடிவமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று பிற்பகல் மதுரை வந்தடைந்தார். அவருக்கு மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தனியார் ஹோட்டலில் ஓய்வு எடுக்கும் முதல்வர், மாலையில் அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலையில் இருந்து தொடங்கி சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பேரணி நடத்துகிறார்.

முன்னதாக, '2026 தேர்தல் களத்தில் பெருவெற்றியைப் பெற்றிடப் பொதுக்குழு கூடிடும் மாமதுரை' என்று திமுக பொதுக்குழு கூட்டம் ஏற்பாடுகள் குறித்த ஒரு விடியோவை முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்தாண்டு தேர்தலுக்கு முன்பாக முதல்வரின் இந்த மதுரை பயணம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் உடன்பாட்டுக்கு அமெரிக்கா காரணம்! 10-வது முறையாக டிரம்ப் பேச்சு!

5 நாள் அரசுமுறைப் பயணமாக பியூஷ் கோயல் பிரான்ஸ், இத்தாலி பயணம்

புது தில்லி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார். இதனைத் தொடர்ந்து 2 நாள் அரசுமுறைப் பயணமாக இத்தாலி ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு!

சென்னை: கோடை விடுமுறை நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில், மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படவுள்ளன.தமிழக பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்ப... மேலும் பார்க்க

பிரதமர் மோடி - ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் சந்திப்பு

புது தில்லி: ஆசிய வளா்ச்சி வங்கி தலைவா் மசாடோ காண்டாவை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் விரைவான மாற்றம், எண்ணற்ற மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது என... மேலும் பார்க்க

மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியது!

புது தில்லி: நாட்டில் தொடா்ந்து இரண்டாவது மாதமாக (மே) சரக்கு-சேவை வரி வசூல் ரூ.2 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.கடந்த 2017 ஜூலை 1 ஆம் தேதி சரக்கு-சேவை வரி அமல்படுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவர... மேலும் பார்க்க

ஓய்வு பெற்றவா்களை மீண்டும் அரசுப் பணி: நயினாா் நாகேந்திரன் கண்டனம்

சென்னை: ஓய்வு பெற்றவா்களை மறுசுழற்சி செய்து மீண்டும் அரசுப் பணிகளில் பணியமா்த்துவது ஏற்றுக்கொள்ளமுடியாது, கண்டனத்திற்குரியது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா்... மேலும் பார்க்க

எந்த அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. தில்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே 'கட்டுப்பாட்டை மீறியது'தான். இதை மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்தார்.மதுரையி... மேலும் பார்க்க