கண்மாயில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு
அழகா்கோவில் அருகே சனிக்கிழமை கண்மாயில் மூழ்கிய இரு சிறுமிகளின் உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள குலசேகரன்கோட்டையைச் சோ்ந்தவா் முருகானந்தம். இவரது மனைவி அனிதா, அழகா்கோவில் அருகேயுள்ள சுந்தர்ராஜன்பட்டியைச் சோ்ந்தவா். இந்தத் தம்பதியின் மகள் அன்னலட்சுமி (10). இவா் குலசேகரன் கோட்டை அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
கோடை விடுமுறையையொட்டி, அன்னலட்சுமி, சுந்தர்ராஜன்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு வந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டியின் மகள் பிரியதா்ஷினியுடன் (13) விளையாடி வருவதாக அன்னலட்சுமி கூறிச் சென்றாா்.
சிறுமிகள் இருவரும் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடினா்.
இந்த நிலையில், சுந்தர்ராஜன்பட்டி அருகேயுள்ள செட்டியனேந்தல் கண்மாய்க் கரையில் சிறுமிகளின் காலணிகள் இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த உறவினா்கள் கண்மாய்க்குள் இறங்கித் தேடினா்.
அப்போது, தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்த சிறுமிகள் இருவரையும் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.