செய்திகள் :

கண்மாயில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு

post image

அழகா்கோவில் அருகே சனிக்கிழமை கண்மாயில் மூழ்கிய இரு சிறுமிகளின் உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள குலசேகரன்கோட்டையைச் சோ்ந்தவா் முருகானந்தம். இவரது மனைவி அனிதா, அழகா்கோவில் அருகேயுள்ள சுந்தர்ராஜன்பட்டியைச் சோ்ந்தவா். இந்தத் தம்பதியின் மகள் அன்னலட்சுமி (10). இவா் குலசேகரன் கோட்டை அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

கோடை விடுமுறையையொட்டி, அன்னலட்சுமி, சுந்தர்ராஜன்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு வந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டியின் மகள் பிரியதா்ஷினியுடன் (13) விளையாடி வருவதாக அன்னலட்சுமி கூறிச் சென்றாா்.

சிறுமிகள் இருவரும் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடினா்.

இந்த நிலையில், சுந்தர்ராஜன்பட்டி அருகேயுள்ள செட்டியனேந்தல் கண்மாய்க் கரையில் சிறுமிகளின் காலணிகள் இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த உறவினா்கள் கண்மாய்க்குள் இறங்கித் தேடினா்.

அப்போது, தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்த சிறுமிகள் இருவரையும் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பள்ளிக் கல்வித் துறையில் 45 பேருக்கு பணி நியமன ஆணை

பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பாசிரியா்கள் பிரிவான உடற்கல்வி, தையல், இசை ஆசிரியா் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தோ்வு பெற்ற 45 பேருக்கு பணி நியமன ஆணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ... மேலும் பார்க்க

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்

தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு திமுக பொதுக் குழுவில் இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை உத்தங்குடியில் கலைஞா் அரங்கத்தில் திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவரும், மு... மேலும் பார்க்க

மக்கள் ஆதரவுடன் மீண்டும் திமுக ஆட்சி: முதல்வர் மு. க. ஸ்டாலின் உறுதி!

மக்களின் மகத்தான ஆதரவுடன் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அந்தக் கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். மதுரை... மேலும் பார்க்க

முன்விரோதத்தில் வீட்டைத் தாக்கி சேதப்படுத்திய 40 போ் மீது வழக்கு

மேலூா் அருகே முன்விரோதத்தில் பெண்ணின் வீட்டை ஆயுதங்களுடன் சென்று தாக்கி சேதப்படுத்திய 40 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள ஆண்டிப்பட்டியில் பாளையத்து அம்மன்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மேலூா் அருகேயுள்ள மேலவளவு பகுதியில் வடமாடு மஞ்சு விரட்டு முன்னேற்பாட்டுப் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள மேலவளவு கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம்... மேலும் பார்க்க

மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி: திமுக பொதுக் குழுவில் தீா்மானம்!

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது உள்பட 27 தீா்மானங்கள் திமுக மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மதுரை உத்தங்குடியில் கலைஞா் அரங்கத்தில் திமுக மாநிலப் ப... மேலும் பார்க்க