செய்திகள் :

புதுச்சேரி: "பள்ளிகள் திறப்பை 2 வாரங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும்" - அதிமுக கூறும் காரணம் என்ன?

post image

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க மாநிலச் செயலாளர் அன்பழகன், ``போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதுச்சேரி வழியாக சென்னை, மகாபலிபுரம், கடலூர் ரயில் வழித்தடத் திட்டத்திற்கு மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.52.13 கோடி ஒதுக்கியிருந்தது.

ஆனால் அதன் ஆரம்பக் கட்ட பணிகளை மேற்கொள்வதற்குப் புதுச்சேரி அரசு சரியாக ஒத்துழைக்கவில்லை.

அதனால் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை அப்படியே ரயில்வே வாரியத்திடம் ஒப்படைத்திருக்கிறது தெற்கு ரெயில்வே நிர்வாகம். மக்களின் பல ஆண்டு கோரிக்கையான இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த புதுச்சேரி ஆளுநரும், முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அதனால் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும்.

புதுச்சேரி
புதுச்சேரி அரசு

புதுச்சேரி அரசு மதுபானங்களின் விலையை உயர்த்தியிருக்கிறது. நுகர்வோர் தலையில் விலையைச் சுமத்தியிருக்கும் அரசின் மதுபானக் கொள்கையில் மாற்றம் வர வேண்டும்.

புதுச்சேரியில் அரசே மதுபானங்களைக் கொள்முதல் செய்து கொடுத்தால், அரசுக்கு ரூ.1,500 கோடி வருவாய் கிடைக்கும். இதுகுறித்து ஆளுநரிடம் அ.தி.மு.க பலமுறை எடுத்துக் கூறியும், அவர் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

மதுபானக் கடை உரிமையாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று ஆட்சியாளர்கள் நினைப்பது போல, ஆளுநரும் நினைக்கிறாரா ? இதில் அவரது நிலைப்பாடு என்ன? உண்மையிலேயே அவருக்கு மாநில நலன் மீது அக்கறை இருந்தால், புதுச்சேரியில் மதுபானக் கொள்முதல் கழகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Sanskrit இந்திய மொழிகளின் தாய் என்ற Amit shah மீது ஏன் கோபம் வரவில்லை? - Aazhi Senthil Nathan

கன்னட மொழி தமிழ் மொழியிலிருந்துதான் பிறந்தது என கமல் ஹாசன் கூறியது சர்ச்சையாகியிருக்கிறது. கமல் அந்த கருத்தை தவிர்த்திருக்கலாம் என்கிறார் மொழி சமத்துவத்துக்கான செய்றப்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன். மேலும் பார்க்க

Gaza: ’உலகமே கேட்கும்படி கத்த வேண்டும்!’ - காசா அம்மாக்களின் குரல் கேட்கிறதா உலகத்துக்கு?

காசாவில் நிலவி வரும் போர்ச்சூழலின் காரணமாக, நாட்டில் உணவுப் பஞ்சம் எந்தளவுக்குக் கடுமையாக இருக்கிறது என்பதை பல வீடியோக்கள் மூலம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதனால், கர்ப்பிணிகள் உடலில் ஊட்டச்சத்துக் க... மேலும் பார்க்க

`பொதுத்துறை நிறுவனங்களை தணிக்கை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியா?' - சு.வெங்கடேசன் காட்டம்

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான அறிவிப்பை சி.ஏ.ஜி உடனடியாக திரும்பப்பெற குடியரசுத் தலைவருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து அவர்... மேலும் பார்க்க

கரூர்: "காவிரி கதவணையில் கலைஞருக்குச் சிலை" - செந்தில் பாலாஜி தகவல்

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் 102 இடங்களில் நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட தி.மு.க சார்பில் நடைபெற்றது.கரூர் மாவட்டம்... மேலும் பார்க்க

மது ஒழிப்பு: ``ஆம், அவர்களை மேடையில் வைத்துக்கொண்டும் விசிக-வால் பேச முடியும்!" - திருமாவளவன்

பி.முருகசாமி இயக்கி, ஜூ ஸ்மித் இசையில், லிசி ஆண்டனி, புதுப்பேட்டை சுரேஷ், ராட்சசன் சரவணன் ஆகியோர் நடித்துள்ள படம் குயிலி. இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற... மேலும் பார்க்க

Sindoor: வீடுகளுக்குக் குங்குமம் அனுப்பும் பாஜக; "ஒரு நாடு, ஒரு கணவர் திட்டமா?" - பஞ்சாப் முதல்வர்

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த மாதம் இந்தியா தாக்குதல் நடத்தியது.இத்தாக்குதலை பா.ஜ.க-வினர் கொண்டாடி வருகின்றனர். பா.ஜ.கவினர் இந்த வெற்றியைக் கொண்டாடும் ... மேலும் பார்க்க