செய்திகள் :

`பொதுத்துறை நிறுவனங்களை தணிக்கை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியா?' - சு.வெங்கடேசன் காட்டம்

post image

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான அறிவிப்பை சி.ஏ.ஜி உடனடியாக திரும்பப்பெற குடியரசுத் தலைவருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அண்மையில் சி.ஏ.ஜி (இந்திய அரசின் தலைமை கணக்குத் தணிக்கையாளர்) வெளியிட்டுள்ள ஒரு டெண்டர் அதிர்ச்சியளிக்கிறது. அது பொதுத்துறை, உள்ளாட்சித்துறைத் தணிக்கையை செய்வதற்கு சி.ஏ நிறுவனங்களை விண்ணப்பிக்குமாறு கோரியுள்ளது. கணக்குத் தணிக்கை ஊழியர்களுடன் சேர்ந்து இந்த சி.ஏ நிறுவனங்கள் தணிக்கை செய்வார்களாம்.

கணக்குத் தணிக்கை

இந்தியாவின் உயர்ந்த தணிக்கை அதிகாரியான சி.ஏ.ஜி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டவர். நாடாளுமன்றத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். அவரது பணி அரசுடைமையான பொதுத்துறை, தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள், உள்ளாட்சி நிறுவனங்களை தணிக்கை செய்வது ஆகும். சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் செய்யும் தணிக்கையும், சி.ஏ.ஜி-யின் தணிக்கையும் ஒன்றல்ல. இந்த நிறுவனங்களைத் தணிக்கை செய்வதில் சி.ஏ.ஜி துறை அதிகாரிகளின் தனித்திறன் நிபுணத்துவமுடையது.

தனியாரை துணைக்கு அழைப்பது ஆபத்தானது

அதேபோல் உள்ளாட்சி தணிக்கையும் சி.ஏ.ஜி-யின் தணிக்கை வரம்புக்கு உட்பட்டதேயாகும். சுருக்கமாக சி.ஏ.ஜி என்பவரும், அவரது கணக்குத் தணிக்கைத் துறையும், இந்திய மக்களின் நிதியின் பாதுகாவலர்கள் என்றால் மிகையாகாது.

இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் புரளும் இந்தத் தணிக்கையைத் தனியார் சி.ஏ நிறுவனங்கள் மேற்கொள்ள அழைப்பது என்பது சி.ஏ.ஜி-க்கு அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள கடமையை மீறுவதாகும். மேலும் இந்த நிறுவனங்களிடம் இருக்கும் ரகசியமான விவரங்களும் தனியார் கைகளுக்குப் போய்ச் சேரும் ஆபத்தும் உண்டு.

குடியரசுத் தலைவருக்கு கடிதம்

சி.ஏ.ஜி எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் பணிபுரிய வேண்டும் என்பதால்தான் அண்ணல் அம்பேத்கார் இயற்றிய அரசியலமைப்புச் சட்டம் அவரைத் தனி உரிமையுடன் வைத்தது. அந்த அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு மாறாக சி.ஏ.ஜி-யே தனியாரை துணைக்கு அழைப்பது ஆபத்தானது.

எனவே சி.ஏ.ஜி உடனடியாக இந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும். இந்தத் துறையின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களது நிதியைக் காப்பாற்ற முடியும். எனவே தனியார் சி .ஏ நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து வெளியிட்டிருக்கும் அறிவிக்கையை சி.ஏ.ஜி உடனடியாகத் திரும்பப் பெற அறிவுறுத்த வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளேன்." என்று தெரிவித்துள்ளார்.

Trump Gold Card: அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறலாம்; நிபந்தனைகள் என்ன?

"ட்ரம்ப் கோல்ட் கார்ட், அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையைப் பெறுவதற்கான 5 மில்லியன் டாலர் பாதை. இது அமெரிக்க பொருளாதாரத்தில் பங்குவகிக்க விரும்பும் இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றிகரம... மேலும் பார்க்க

'ஏழு ஆண்டுக்கால மின் தடை பிரச்னைக்குத் தீர்வு!' - திருச்சி எம்.பி துரை வைகோவின் மகிழ்ச்சி பதிவு

ஏழு ஆண்டுகள் மின் பிரச்னையால் தத்தளித்த மக்களின் பிரச்னை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு முடிவுக்கு வர இருப்பதாக, திருச்சி தொகுதி ம.தி.மு.க எம்.பி துரை வைகோ மகிழ்ச்சியோடு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்... மேலும் பார்க்க

Israel: "கிரேட்டா தன்பெர்கின் படகை எதிர்கொள்ள 'தயாராக' இருக்கிறோம்" - இஸ்ரேல் ராணுவ அதிகாரி!

சுவிடனைச் சேர்ந்த 22 வயது காலநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், காசாவில் மனிதாபிமான உதவிகளை தடுத்துவரும் இஸ்ரேஸ் ராணுவத்தை எதிர்த்து, அங்குள்ள மக்களுக்கு உதவிகள் வழங்குவதற்காகக் கடந்த ஜுன் 1ம் தே... மேலும் பார்க்க

RCB வெற்றிக் கொண்டாட்டம்: "உயிரிழப்புகள் இல்லையென்றால், இது ஒரு சாதனை நிகழ்வு!" - கர்நாடக அமைச்சர்

18 ஆண்டுகள் கழித்து ஐ.பி.எல்லில் ஆர்.சி.பி வெற்றி பெற்றதையடுத்து, நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் கொண்டாட்ட விழா நடத்தப்பட்டது. அங்கே லட்சக்கணக்கில் மக்கள் கூட, கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழ... மேலும் பார்க்க