செய்திகள் :

RCB வெற்றிக் கொண்டாட்டம்: "உயிரிழப்புகள் இல்லையென்றால், இது ஒரு சாதனை நிகழ்வு!" - கர்நாடக அமைச்சர்

post image

18 ஆண்டுகள் கழித்து ஐ.பி.எல்லில் ஆர்.சி.பி வெற்றி பெற்றதையடுத்து, நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் கொண்டாட்ட விழா நடத்தப்பட்டது. அங்கே லட்சக்கணக்கில் மக்கள் கூட, கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்... 47 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கர்நாடகா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறியதாவது...

"நாங்கள் விதான் சவுதாவில் (கர்நாடகா சட்டமன்ற வளாகம்) சுமார் 1 லட்ச மக்களும், சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே 25,000 பேர் கூடுவார்கள் என்று நினைத்தோம். ஆனால், 2.5 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

ஆர்.சி.பி அணி
ஆர்.சி.பி அணி

8.7 லட்ச மெட்ரோ டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. இதில் பெரும்பாலானவர்கள் கிரிக்கெட் ரசிகர்கள் என்று கருதும்பட்சத்தில், மொத்தம் 8 லட்சம் பேர் ஸ்டேடியத்தின் முன் கூடியுள்ளனர். கிரிக்கெட்டிற்காக இப்படி முன்பு அதிக கூட்டம் கூடியதில்லை. எந்த உயிரிழப்புகளும் ஏற்படாமல் இருந்திருந்தால் இது ஒரு சாதனையாக மாறியிருக்கும்.

நாங்கள் ஆர்.சி.பியிடமும், கர்நாடகா கிரிக்கெட் சங்கத்திடமும் பேசியிருக்கிறோம். அவர்கள் அவர்களின் கருத்துகளை முன்வைத்தனர். இது மீண்டும் நடக்காமல் இருக்க, சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டேன்" என்று பேசியுள்ளார்.

உயிரிழந்த 11 பேரும் 40 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் கல்வி; 500 கோடிக்கு மேல் சொத்து; அடுத்தடுத்து வழக்குகள் - யாரிந்த ஆற்றல் அசோக் குமார்?

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம் அது... தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.அக்கட்சியின் முக்கியப் பொற... மேலும் பார்க்க

Census - Delimitation: "ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது" - எச்சரிக்கும் ஸ்டாலின்

இந்தியாவில் 2011-க்குப் பிறகு 14 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று நேற்... மேலும் பார்க்க

RCB உயர் அதிகாரி உட்பட 4 பேர் கைது; பெங்களூரு காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

சரிபெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்த வழக்கில், ஆர்.சி.பி அணி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் உள்ள நபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 ஆண்டுகள... மேலும் பார்க்க

புதின்-ஜெலன்ஸ்கி வாக்குவாதம் தீவிரம்; ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம்... தாக்குதல்கள் ஒரு பக்கம்... என ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தாக்குதல்களும், பதில் தாக்குதல்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், ரஷ்... மேலும் பார்க்க

PMK: "விரைவில் நல்ல செய்தி; ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்பு..." - ஜி.கே மணி சொல்வது என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அன்புமணி ஆதரவாளர்களான பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்த... மேலும் பார்க்க