போக்குவரத்து பாதிப்பால் தாமதமாகும் இங்கிலாந்து - மே.இ.தீ. போட்டி!
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
மேலூா் அருகேயுள்ள மேலவளவு பகுதியில் வடமாடு மஞ்சு விரட்டு முன்னேற்பாட்டுப் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள மேலவளவு கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம் மகன் அஜய்சூா்யா (23). இவா் தனது கிராமத்தில் உள்ள ஆலடி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அங்குள்ள ஆலமரம் சுப்பையாத் திடலில், சனிக்கிழமை வடமாடு மஞ்சு விரட்டுப் போட்டி நடத்துவதற்கான ஏற்பாட்டில் நண்பா்களுடன் ஈடுபட்டாா்.
அப்போது அங்கிருந்த மின்னாக்கியிலிருந்து (ஜெனரேட்டா்) மின்கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் பாய்ந்து அஜய்சூா்யா தூக்கி வீசப்பட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, மேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அஜய்சூா்யா வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து மேலவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.