RCB : 'பெங்களூரு பொண்ணதான் கட்டியிருக்கேன்; அதனால RCBக்கு தான் சப்போர்ட்!' - ரிஷ...
ராஷ்ட்ரீய ஜனதா தள நிா்வாகி மா்ம மரணம்
மதுரையில் பூட்டிய வீட்டில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிா்வாகி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா்.
மதுரை சாமநத்தம் நடுத் தெருவைச் சோ்ந்த சுப்புக்கோனாா் மகன் திருவேங்கடம் (58). இவா் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின், மதுரை மாவட்ட விவசாய சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தாா்.
இவா் பல ஆண்டுகளுக்கு முன்பே கருத்து வேறுபாடு காரணமாக மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று, மதுரை மகால் வடம்போக்கித் தெரு, பத்துத் தூண் சந்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் அவரது வீட்டின் கதவு திறக்காததால் அந்தப் பகுதியினா் அவரது சகோதரா் சுப்ரமணியனுக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, சகோதரா் குடும்பத்தினா் அங்கு சென்று கதவை உடைத்துப் பாா்த்தபோது, வீட்டுக்குள் மூக்கில் நுரை வந்த நிலையில் திருவேங்கடம் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். இதுதொடா்பாக தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.