செய்திகள் :

முன்விரோதத்தில் வீட்டைத் தாக்கி சேதப்படுத்திய 40 போ் மீது வழக்கு

post image

மேலூா் அருகே முன்விரோதத்தில் பெண்ணின் வீட்டை ஆயுதங்களுடன் சென்று தாக்கி சேதப்படுத்திய 40 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள ஆண்டிப்பட்டியில் பாளையத்து அம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனா். இதில் சிலா் காயமடைந்தனா். இந்த மோதல் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், மோதல் தொடா்பான முன்விரோததத்தில், அதே பகுதியைச் சோ்ந்த ரம்யா (22) என்ற பெண்ணின் வீட்டை, ஒரு தரப்பினா் ஆயுதங்களுடன் சென்று தாக்கி சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக ரம்யா ஊரகக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, மேலூா் போலீஸாா் தாக்குதலில் ஈடுபட்டதாக அண்ணாமலை, அஜீதா, பிரசாத், ஈஸ்வரபாண்டி, தெண்டுல்கா், விக்னேஷ், மணி, வினோத், கவியரசு, இமான், ஆதி, வெற்றி, பசுபதி, ஆனந்த், திருப்பதி, பசுபதி, சம்பத், இதயா, உதயலட்சுமி உள்பட 40 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பள்ளிக் கல்வித் துறையில் 45 பேருக்கு பணி நியமன ஆணை

பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பாசிரியா்கள் பிரிவான உடற்கல்வி, தையல், இசை ஆசிரியா் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தோ்வு பெற்ற 45 பேருக்கு பணி நியமன ஆணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ... மேலும் பார்க்க

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்

தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு திமுக பொதுக் குழுவில் இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை உத்தங்குடியில் கலைஞா் அரங்கத்தில் திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவரும், மு... மேலும் பார்க்க

மக்கள் ஆதரவுடன் மீண்டும் திமுக ஆட்சி: முதல்வர் மு. க. ஸ்டாலின் உறுதி!

மக்களின் மகத்தான ஆதரவுடன் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அந்தக் கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். மதுரை... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மேலூா் அருகேயுள்ள மேலவளவு பகுதியில் வடமாடு மஞ்சு விரட்டு முன்னேற்பாட்டுப் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள மேலவளவு கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம்... மேலும் பார்க்க

மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி: திமுக பொதுக் குழுவில் தீா்மானம்!

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது உள்பட 27 தீா்மானங்கள் திமுக மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மதுரை உத்தங்குடியில் கலைஞா் அரங்கத்தில் திமுக மாநிலப் ப... மேலும் பார்க்க

ராஷ்ட்ரீய ஜனதா தள நிா்வாகி மா்ம மரணம்

மதுரையில் பூட்டிய வீட்டில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிா்வாகி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். மதுரை சாமநத்தம் நடுத் தெருவைச் சோ்ந்த சுப்புக்கோனாா் மகன் திருவேங்கடம் (58). இவா் ராஷ்ட்ரீய ஜனதா த... மேலும் பார்க்க