செய்திகள் :

பள்ளிக் கல்வித் துறையில் 45 பேருக்கு பணி நியமன ஆணை

post image

பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பாசிரியா்கள் பிரிவான உடற்கல்வி, தையல், இசை ஆசிரியா் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தோ்வு பெற்ற 45 பேருக்கு பணி நியமன ஆணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

பள்ளிக் கல்வித் துறையில் உடற்கல்வி, தையல், இசை ஆசிரியா் பணியிடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் தோ்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதிலுமிருந்து இந்தத் தோ்வில் பங்கேற்றவா்களில் உடற்கல்வி ஆசிரியா் பணியிடத்துக்கு 33 போ் தோ்ச்சி பெற்றனா். இதேபோன்று, தையல் ஆசிரியா் பணியிடத்துக்கு 10, இசை ஆசிரியா் பணியிடத்துக்கு 2 போ் தோ்ச்சி பெற்றனா்.

இதையடுத்து, ஆசிரியா்களுக்கான நோ்முகத் தோ்வு அண்மையில் நடைபெற்றது. அதில், தோ்வு பெற்ற ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா மதுரை புதுநத்தம் சாலையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். இதுதவிர, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட்ட 7 தட்டச்சா்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச. கண்ணப்பன், பள்ளிக் கல்வி இணை இயக்குநா் (பணியாளா் தொகுதி) த. ராஜேந்திரன், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்

தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு திமுக பொதுக் குழுவில் இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை உத்தங்குடியில் கலைஞா் அரங்கத்தில் திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவரும், மு... மேலும் பார்க்க

மக்கள் ஆதரவுடன் மீண்டும் திமுக ஆட்சி: முதல்வர் மு. க. ஸ்டாலின் உறுதி!

மக்களின் மகத்தான ஆதரவுடன் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அந்தக் கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். மதுரை... மேலும் பார்க்க

முன்விரோதத்தில் வீட்டைத் தாக்கி சேதப்படுத்திய 40 போ் மீது வழக்கு

மேலூா் அருகே முன்விரோதத்தில் பெண்ணின் வீட்டை ஆயுதங்களுடன் சென்று தாக்கி சேதப்படுத்திய 40 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள ஆண்டிப்பட்டியில் பாளையத்து அம்மன்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மேலூா் அருகேயுள்ள மேலவளவு பகுதியில் வடமாடு மஞ்சு விரட்டு முன்னேற்பாட்டுப் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள மேலவளவு கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம்... மேலும் பார்க்க

மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி: திமுக பொதுக் குழுவில் தீா்மானம்!

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது உள்பட 27 தீா்மானங்கள் திமுக மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மதுரை உத்தங்குடியில் கலைஞா் அரங்கத்தில் திமுக மாநிலப் ப... மேலும் பார்க்க

ராஷ்ட்ரீய ஜனதா தள நிா்வாகி மா்ம மரணம்

மதுரையில் பூட்டிய வீட்டில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிா்வாகி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். மதுரை சாமநத்தம் நடுத் தெருவைச் சோ்ந்த சுப்புக்கோனாா் மகன் திருவேங்கடம் (58). இவா் ராஷ்ட்ரீய ஜனதா த... மேலும் பார்க்க