செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்; பிரதமருக்கு இந்தியா கூட்டணி கடிதம்!

post image

பஹல்காம் தாக்குதல் மற்றும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது.

தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு போர் பதற்றம் நிலவிய நிலையில், இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை உடன்பட்டதாகவும், போர் முடிவுக்கு வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

இதையடுத்து இரு நாட்டு அதிகாரிகளும் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். பின்னர், பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி, போரை நிறுத்த கோரியதால் தான் போரை நிறுத்தினோம் என்று இந்தியா தெரிவித்திருந்தது.

ஆனால், வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் நடத்திய பேச்சுவார்த்தை மூலமே இந்தியா - பாகிஸ்தான் மோதல் நிறுத்தப்பட்டதாக டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

டிரம்ப்பின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மறுப்பு தெரிவிக்காமல் இருப்பது குறித்து காங்கிரஸ் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றது.

இதனிடையே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி, பஹல்காம் தாக்குதல் மற்றும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸின் தீபேந்தர் ஹூடா பேசியதாவது:

”நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டக் கோரி 16 அரசியல் கட்சிகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் போதும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலின் போதும், அனைத்து எதிர்க்கட்சிகளும் நமது ராணுவத்துக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் ஆதரவாக நின்றன.

அமெரிக்கா போர் நிறுத்தத்தை அறிவித்தபோது, ​​அனைத்துக் கட்சிகளும் நமது ஆயுதப் படைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரினோம்.

பஹல்காம், ஆபரேஷன் சிந்தூ, அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பு வரை, நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். பயங்கரவாதத்தை எவ்வாறு ஒழிப்பது மற்றும் நமது எதிர்கால உத்திகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். இப்போது இந்திய அரசு தனது கருத்துக்களை உலகிற்கு முன் வைத்து வருவதால், நாடாளுமன்றத்திலும் அரசாங்கம் அதையே செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : மன்னிப்பு கேட்பதில் என்ன சிக்கல்? கமலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

பிரதமா் மோடியுடன் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் சந்திப்பு: பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு

பிரதமா் நரேந்திர மோடியை ஆஸ்திரேலிய துணை பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சா்டு மாா்லஸ் புதன்கிழமை சந்தித்தாா். அப்போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நடவடிக்கைகளுக்கு ஆஸ்திர... மேலும் பார்க்க

ராணுவத்தை அவமதிப்பது கருத்து சுதந்திரமாகாது: ராகுல் காந்திக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் கண்டனம்

‘கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்திய ராணுவத்துக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் புதன்கிழம... மேலும் பார்க்க

ஏழைக் கைதிகள் ஜாமீனில் வருவதற்கு மத்திய நிதியைப் பயன்படுத்த வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

குடும்ப ஏழ்மை நிலை காரணமாக ஜாமீன் பெற இயலாத அல்லது அபராதத் தொகையை செலுத்தி சிறையிலிருந்து விடுதலை பெற இயலாத ஏழைக் கைதிகளுக்கு மத்திய அரசின் நிதியிலிருந்து நிதியுதவி அளிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் ... மேலும் பார்க்க

வரி அல்லாத பிற வா்த்தக தடைகளை தடுக்க வேண்டும்: டபிள்யூடிஓவிடம் இந்தியா வலியுறுத்தல்

சந்தையில் சரக்கு மற்றும் சேவைகளை விற்பனை செய்வதில் வரி அல்லாத பிற வா்த்தக தடைகளைத் தடுக்க உலக வா்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இந்தியா-பிரான்ஸ் இடை... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவி நீக்க தீா்மானம்: ஒருமித்த ஆதரவுக்கு கட்சிகளுடன் அரசு ஆலோசனை

வீட்டில் பணம் கிடைத்த குற்றச்சாட்டில் அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவைப் பதவியிலிருந்து நீக்கும் நாடாளுமன்ற தீா்மானத்துக்கு ஒருமித்த ஆதரவை எட்ட அனைத்து கட்சிகளுடன் கலந்தாலோசித்து வருவத... மேலும் பார்க்க

அயோத்தி ராமா் கோயில் முதல் தள சந்நிதிகளில் இன்று பிராணப் பிரதிஷ்டை

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயிலில் முதல் தளத்தில் அமைந்துள்ள ராம தா்பாா் உள்பட 8 சந்நிதிகளில் வியாழக்கிழமை பிராணப் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையில் இ... மேலும் பார்க்க