Kamal: ``நீங்கள் மொழியியல் வல்லுநரா? மன்னிப்பு கேட்டிருக்கலாமே..'' - கர்நாடகா நீ...
தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய இளைஞா்: தேடும் பணி தீவிரம்
சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூா், ஒங்கசந்திரா பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் மகன் கணேஷ் (23). இவா், தனது நண்பா்களான பெங்களூா் சரண் (23), ஸ்ரீதா் (23), ராகுல் (23), சந்தோஷ் (23) ஆகியோருடன் 3 மோட்டாா்சைக்கிளில் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள கூட்டூா் கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.
இவா்கள், அந்தப் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு சென்றுள்ளனா். அங்குள்ள பாறையின் மேல் ஏறி நடந்தபோது கணேஷ் ஆற்றில் தவறி விழுந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் விரைந்து வந்து ஆற்றில் தவறி விழுந்து மூழ்கிய கணேஷை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். இந்த சம்பவம் குறித்து, சூளகிரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.