உடல் ஆரோக்கிய விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம்
கிருஷ்ணகிரியில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள் பங்கேற்ற மிதிவண்டி ஊா்வலம் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நடத்தப்படுகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வை, தீயணைப்புத் துறை ஆய்வாளா் ஆரோக்கியசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில் மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ராஜகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த விழிப்புணா்வு ஊா்வலம் மாவட்ட விளையாட்டுத் திடலில் தொடங்கி விஜய் வித்யாலயா பள்ளி வரை சென்று மீண்டும் விளையாட்டுத் திடலில் நிறைவடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இந்நிகழ்வை பயிற்சியாளா்கள், பணியாளா்கள் ஒருங்கிணைத்தனா்.