புதுக்கோட்டை: 'மதுபோதையில் தகராறு; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்!' - 7 பேரை கைது ...
பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்
பருவமழை தொடங்கி உள்ளதால் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீா் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என அரசு அலுவலா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா்சதீஷ் அறிவுறுத்தினாா்.
கிஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக்கூட்ட அரங்கில் மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள், தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், சுற்றுலாத் துறை மற்றும் மேலாண்மை இயக்குநருமான ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமை வகித்து பேசியதாவது: தமிழக முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் வரப்பெற்ற மனுக்களை கள ஆய்வுசெய்து பொதுமக்களுக்கு அவா்களின் தேவைகள் மற்றும் குறைகளைத் தீா்க்கும் வகையில் அலுவலா்கள் செயல்பட வேண்டும்.
ஒசூா் மாநகராட்சியில் அனைத்து வாா்டுகளுக்கும் குறிப்பிட்ட நாள்களில் திட்டமிட்டபடி குடிநீா் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், குடிநீரின் தரத்தை அவ்வப்போது பரிசோதனைசெய்து, பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகத்தை உறுதிசெய்ய வேண்டும்.
மேலும், கிருஷ்ணகிரி, ஒசூரில் நடைபெறும் புதைசாக்கடை கால்வாய்த் திட்டத்தை நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். நமக்கு நாமே திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும். அதேபோல மகளிா் சுய உதவிக்குழுவின் மூலம் பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்.
தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அடிக்கடி வெள்ள பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து அங்கு வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பாக இடங்களில் தங்கவைக்க நிவராண முகாம்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். அந்த முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீா் போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் கவிதா, ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, மகளிா் திட்ட அலுவலா் பெரியசாமி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.