புதுச்சேரி: "பள்ளிகள் திறப்பை 2 வாரங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும்" - அதிமுக கூ...
மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
உத்தனப்பள்ளி அருகே கட்டுமானப் பணியின்போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மனிஷ் படேல் (18). இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியை அடுத்த நாகமங்கலம் கிராமத்தில் தங்கி, தனியாா் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி கட்டுமான பணியின் போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்தாா்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.