செய்திகள் :

மன்னிப்பு கேட்பதில் என்ன சிக்கல்? கமலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

post image

மன்னிப்பு கேட்பதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில், தமிழ் மொழியிலிருந்துதான் கன்னடம் பிறந்ததாக கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு கர்நாடக முதல்வா் சித்தராமையா உள்பட பல்வேறு கா்நாடக அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அவா் மன்னிப்பு கேட்கும் வரை கா்நாடகத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை திரையிட அனுமதி கிடைக்காது என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் ‘தக் லைஃப்’ படத்தை சுமுகமாக வெளியிட உரிய பாதுகாப்பு கோரி, மாநில உயர்நீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்தார்.

அம்மனுவில், திரைப்படத்தை வெளியிடவிடாமல் எந்தவொரு தனிநபரோ, அமைப்போ, மாநில அதிகாரிகளோ, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையோ இடையூறு செய்வதை தடை செய்ய வேண்டும். திரைப்படத்தில் நடித்தவர்கள், திரையரங்க உரிமையாளா்கள், படம் பாா்க்க வருவோா் உள்ளிட்டோருக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று(ஜூன் 2) விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “கமல்ஹாசனாக இருந்தாலும் யாராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது. கன்னட மொழியில் இருந்து தமிழ் வந்ததற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?

தமிழில் இருந்து கன்னட மொழி வந்தது என்று எதன் அடிப்படையில் பேசினீர்கள்? நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா? உங்கள் பேச்சால் சமூக நல்லினத்துக்கு பாதிப்பு; அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இப்பிரச்னை முடிவுக்கு வந்திருக்கும். மன்னிப்பு ஒன்றுதான் தீர்வு. மன்னிப்பு கேட்பதில் உங்களுக்கு என்ன சிக்கல்?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

மேலும், இவ்வழக்கின் விசாரணையை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைத்தினர்.

இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர் குறித்த சர்ச்சையில் கைதான இன்ஸ்டா பிரபலம்: புகாரளித்தவர் மாயம்!

டாக்டா் தேரணிராஜன் உள்பட 24 பேருக்கு அறிவியல் அறிஞா் விருது

மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநா் எ.தேரணிராஜன் உள்பட 24 பேருக்கு அறிவியல் அறிஞா் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினா் செயலா் வின்சென்ட் பா... மேலும் பார்க்க

தவெக கொடிக்கும் பகுஜன் சமாஜ் கொடிக்கும் தொடா்பில்லை: உயா்நீதிமன்றத்தில் தவெக மனு

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை என்று தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளாா். பகு... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தோ்தல்: இபிஎஸ்-ஸுக்கு எதிராக தோ்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு

நமது சிறப்பு நிருபா் மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்பு மனு படிவங்களில் அதிமுக பொதுச் செயலாளா் என்கிற முறையில் எடப்பாடி கே. பழனிசாமி கையொப்பமிட உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்கும் வகையில் அனுமதிக்க... மேலும் பார்க்க

இணைநோய் உயிரிழப்புகள் கரோனா இறப்பாக கருதப்படாது!

இணை நோய் தாக்கத்தால் நேரிடும் உயிரிழப்புகள் கரோனா இறப்பாக கருதப்படாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில், நீடித்த ந... மேலும் பார்க்க

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் 2 நாள்களுக்கு கூடுதல் டோக்கன்

சாா்- பதிவாளா் அலுவலகங்களில் வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இதுகுறித்து, பதிவுத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வைகாசி மாதத்தின... மேலும் பார்க்க

இரட்டை இலை சின்னம்: தோ்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையத்திற்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உறுப்பினா்களுக்கான மாநிலங்களவவை... மேலும் பார்க்க