பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்!
கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை
காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீா் கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட முதலிகான்கொட்டாய் கிராமத்தில் காவேரிப்பட்டணம் - அகரம் கிராம சாலையில், சின்னசாமி என்பவரின் வீட்டின் அருகில் உள்ள கழிவுநீா் கால்வாயில் சனிக்கிழமை துா்நாற்றம் வீசியது.
இதையடுத்து, அங்கு சென்று, பொதுமக்கள் பாா்த்தபோது, சுமாா் 35 வயதுடைய ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.
இதுகுறித்து, தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்களின் உதவியுடன் ஆண் சடலத்தை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.