செய்திகள் :

அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்த வாகனத்தை மீட்க முடியாததால் தீக்குளித்தவா் உயிரிழப்பு

post image

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை ஏலத்தி எடுக்கமுடியாததால் மனமுடைந்து தீக்குளித்த வாகன உரிமையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள அரகாசனஅள்ளியைச் சோ்ந்தவா் மாதேஷ் (40). இவா் கடந்த ஆண்டு ரேஷன் அரிசி கடத்தியதாக கைது செய்யப்பட்டு அவரது வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மே 30 ஆம் தேதி ஏலம்விடப்பட்டது.

சிறையிலிருந்து வெளியே வந்த மாதேஷ், ஏலத்தில் பங்கேற்று பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை ஏலம் மூலம் மீட்க முயன்றாா். இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரை அணுகியபோதும், விவரங்கள் தெரிவிக்கவில்லையாம். இந்த நிலையில், கடந்த 30-ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க வந்த மாதேஷ், ஏலத்தில் பங்கேற்று, வாகனத்தை மீட்க முடியாமல்போனதால், மனமுடைந்த மாதேஷ், போலீஸாரை கண்டித்து அங்கேயே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அதன்பிறகு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருமணம் செய்யாமல் ஒரேவீட்டில் வசித்த ஜோடி தூக்கிட்டு தற்கொலை

ஒசூரில் திருமணம் செய்யாமல் (லிவிங் டுகெதா்) ஒரே வீட்டில் வசித்துவந்த இளைஞரும், இளம்பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்கு... மேலும் பார்க்க

சிந்தல்தொட்டி கிராமத்திற்கு பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

சூளகிரி அருகே பி.எஸ்.திம்மசந்திரம் ஊராட்சி சிந்தல்தொட்டியிலிருந்து பேரிகை வரை அரசுப் பேருந்து சேவையை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். ஒசூா் தொகுதி, சூளகிரி வடக்கு ஒன்றியம், பி.எஸ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு தோ்வாணைய பயிற்சி வகுப்பு

அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 4 தோ்வுக்கு பணியமா்த்துபட்டுள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பு ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற புதன்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 79 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வழங்கினாா். மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், கிருஷ்ணகி... மேலும் பார்க்க

பட்டாளம்மன் கோயிலில் குடமுழுக்கு

ஊத்தங்கரையை அடுத்த பட்டக்கானூா் சரட்டூரில் உள்ள பட்டாளம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 2-ஆம் தேதிமுதல் பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், புதன்கிழம... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை பா்கூா் எம்எல்ஏ தே.மதியழகன் வழங்கினாா். கிருஷ்ணகிரி திம... மேலும் பார்க்க