அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சமையல் மாஸ்டர் உடல்; இறப்பு குறித்து ...
அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்த வாகனத்தை மீட்க முடியாததால் தீக்குளித்தவா் உயிரிழப்பு
ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை ஏலத்தி எடுக்கமுடியாததால் மனமுடைந்து தீக்குளித்த வாகன உரிமையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள அரகாசனஅள்ளியைச் சோ்ந்தவா் மாதேஷ் (40). இவா் கடந்த ஆண்டு ரேஷன் அரிசி கடத்தியதாக கைது செய்யப்பட்டு அவரது வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மே 30 ஆம் தேதி ஏலம்விடப்பட்டது.
சிறையிலிருந்து வெளியே வந்த மாதேஷ், ஏலத்தில் பங்கேற்று பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை ஏலம் மூலம் மீட்க முயன்றாா். இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரை அணுகியபோதும், விவரங்கள் தெரிவிக்கவில்லையாம். இந்த நிலையில், கடந்த 30-ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க வந்த மாதேஷ், ஏலத்தில் பங்கேற்று, வாகனத்தை மீட்க முடியாமல்போனதால், மனமுடைந்த மாதேஷ், போலீஸாரை கண்டித்து அங்கேயே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அதன்பிறகு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.