செய்திகள் :

அருணாசலில் வெள்ளம், நிலச்சரிவு: 11 பேர் பலி, 23 மாவட்டங்கள் பாதிப்பு!

post image

அருணாச்சலப் பிரதேசத்தில் இடைவிடாத பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன.

மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத்தின் அறிக்கையின்படி,

ஜூன் 1ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவின்போது சுவர் இடிந்து விழுந்ததில் 38 வயது பாபெண் முர்மு உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து மூன்று தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

23 மாவட்டங்களில் உள்ள 156 கிராமங்களில் மொத்தம் 938 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுபன்சிரி மாவட்டத்தில் 114 குடிசை வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. மேலும் 51 சாலைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 17 மின் இணைப்புகள், 23 நீர் வழங்கல் இணைப்புகள் மற்றும் 2 பள்ளிகள் சேதமடைந்ததுள்ளது. இட்டாநகர் தலைநகர் பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஆறுகள், துணை நதிகள் தொடர்ந்து அபாய அளவைத் தாண்டி பாய்வதால் மேற்கு கமெங், கம்லே, லோயர் மற்றும் அப்பர் சுபன்சிரி, பப்பும் பரே, திபாங் பள்ளத்தாக்கு, லோயர் திபாங் பள்ளத்தாக்கு, லோஹித், சாங்லாங், கிரா டாடி, குருங் குமே, லாங்டிங் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.

மேலும், டிரான்ஸ்-அருணாசல் நெடுஞ்சாலையில் உள்ள மக்கான்டோங் பாலத்தின் பாதி அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மியாவோ மற்றும் போர்டும்சா இடையேயான சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை செயலாளர் டானி சுலு தெரிவித்தார்.

திபாங் பள்ளத்தாக்கிலிருந்து 14 தொழிலாளர்களும், லோஹித் மாவட்டத்தில் உள்ள ஜல்லுக்பாரி கிராமத்திலிருந்து 4 பேர் உள்பட 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

ஏழைக் கைதிகள் ஜாமீனில் வருவதற்கு மத்திய நிதியைப் பயன்படுத்த வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

குடும்ப ஏழ்மை நிலை காரணமாக ஜாமீன் பெற இயலாத அல்லது அபராதத் தொகையை செலுத்தி சிறையிலிருந்து விடுதலை பெற இயலாத ஏழைக் கைதிகளுக்கு மத்திய அரசின் நிதியிலிருந்து நிதியுதவி அளிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் ... மேலும் பார்க்க

வரி அல்லாத பிற வா்த்தக தடைகளை தடுக்க வேண்டும்: டபிள்யூடிஓவிடம் இந்தியா வலியுறுத்தல்

சந்தையில் சரக்கு மற்றும் சேவைகளை விற்பனை செய்வதில் வரி அல்லாத பிற வா்த்தக தடைகளைத் தடுக்க உலக வா்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இந்தியா-பிரான்ஸ் இடை... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவி நீக்க தீா்மானம்: ஒருமித்த ஆதரவுக்கு கட்சிகளுடன் அரசு ஆலோசனை

வீட்டில் பணம் கிடைத்த குற்றச்சாட்டில் அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவைப் பதவியிலிருந்து நீக்கும் நாடாளுமன்ற தீா்மானத்துக்கு ஒருமித்த ஆதரவை எட்ட அனைத்து கட்சிகளுடன் கலந்தாலோசித்து வருவத... மேலும் பார்க்க

அயோத்தி ராமா் கோயில் முதல் தள சந்நிதிகளில் இன்று பிராணப் பிரதிஷ்டை

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயிலில் முதல் தளத்தில் அமைந்துள்ள ராம தா்பாா் உள்பட 8 சந்நிதிகளில் வியாழக்கிழமை பிராணப் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையில் இ... மேலும் பார்க்க

ம.பி.: மா்ம விலங்கு தாக்கியதில் ஒரே கிராமத்தில் 6 போ் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தின் பா்வானி மாவட்டத்தில் உள்ள லிம்பாய் கிராமத்தில் மா்ம விலங்கு தாக்கியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 போ் கடந்த மாதம் 23-ஆம் தேதிமுதல் உயிரிழந்துள்ளனா். கிராம மக்களைக் க... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: காங்கிரஸ் மூத்த தலைவா் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான சங்கா் மலாகா், முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தாா். மேற்கு வங்கத்தில் அடுத்த... மேலும் பார்க்க