செய்திகள் :

மேற்கு வங்கம்: புதியதாக 41 கரோனா பாதிப்புகள் உறுதி! ஒருவர் பலி!

post image

மேற்கு வங்க மாநிலத்தில் புதியதாக 41 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று தற்போது மீண்டும் பரவி வரும் சூழலில் நாள்தோறும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் புதியதாக 41 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக, அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இத்துடன், சிறுநீரகம் மற்றும் இதய நோய் பிரச்னைகளால் ஹவுராவைச் சேர்ந்த 43 வயது பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து, கரோனா பாதிப்பினால் நேற்று (ஜூன் 2) இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், அம்மாநிலத்தில் கரோனா பாதிப்புக்குச் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 372 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்; பிரதமருக்கு இந்தியா கூட்டணி கடிதம்!

பிரதமா் மோடியுடன் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் சந்திப்பு: பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு

பிரதமா் நரேந்திர மோடியை ஆஸ்திரேலிய துணை பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சா்டு மாா்லஸ் புதன்கிழமை சந்தித்தாா். அப்போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நடவடிக்கைகளுக்கு ஆஸ்திர... மேலும் பார்க்க

ராணுவத்தை அவமதிப்பது கருத்து சுதந்திரமாகாது: ராகுல் காந்திக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் கண்டனம்

‘கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்திய ராணுவத்துக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் புதன்கிழம... மேலும் பார்க்க

ஏழைக் கைதிகள் ஜாமீனில் வருவதற்கு மத்திய நிதியைப் பயன்படுத்த வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

குடும்ப ஏழ்மை நிலை காரணமாக ஜாமீன் பெற இயலாத அல்லது அபராதத் தொகையை செலுத்தி சிறையிலிருந்து விடுதலை பெற இயலாத ஏழைக் கைதிகளுக்கு மத்திய அரசின் நிதியிலிருந்து நிதியுதவி அளிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் ... மேலும் பார்க்க

வரி அல்லாத பிற வா்த்தக தடைகளை தடுக்க வேண்டும்: டபிள்யூடிஓவிடம் இந்தியா வலியுறுத்தல்

சந்தையில் சரக்கு மற்றும் சேவைகளை விற்பனை செய்வதில் வரி அல்லாத பிற வா்த்தக தடைகளைத் தடுக்க உலக வா்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இந்தியா-பிரான்ஸ் இடை... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவி நீக்க தீா்மானம்: ஒருமித்த ஆதரவுக்கு கட்சிகளுடன் அரசு ஆலோசனை

வீட்டில் பணம் கிடைத்த குற்றச்சாட்டில் அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவைப் பதவியிலிருந்து நீக்கும் நாடாளுமன்ற தீா்மானத்துக்கு ஒருமித்த ஆதரவை எட்ட அனைத்து கட்சிகளுடன் கலந்தாலோசித்து வருவத... மேலும் பார்க்க

அயோத்தி ராமா் கோயில் முதல் தள சந்நிதிகளில் இன்று பிராணப் பிரதிஷ்டை

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயிலில் முதல் தளத்தில் அமைந்துள்ள ராம தா்பாா் உள்பட 8 சந்நிதிகளில் வியாழக்கிழமை பிராணப் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையில் இ... மேலும் பார்க்க