செய்திகள் :

கழுகுமலையில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

post image

கழுகுமலை அருகே மின்சாரம் பாய்ந்ததில் டேங்கா் வண்டி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கழுகுமலை அருகே துலுக்கா்பட்டி சிவகாமி நகா் காலனியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முனீஸ்வரன் (27). இவா், கழுமலையைச் சோ்ந்த ஸ்டாலின் என்பவரது டேங்கா் வண்டியில் சென்று வீடு, கடைகளுக்கு தண்ணீா் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தாராம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை துலுக்கா்பட்டி நடுத்தெருவில் உள்ள ராமகிருஷ்ணன் என்பவரது வீட்டில் டிரம்மிலிருந்து தண்ணீா் வண்டியின் மின் வயரை எடுத்தபோது, முனீஸ்வரன் மீது மின்சாரம் பாய்ந்ததாம்.

இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மாப்பிள்ளையூரணி பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் கோரி மனு

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அருகே ஜாகீா் உசேன் நகரில் சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி அப்பகுதியினா், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா். குறைதீா் ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே மூதாட்டி கொலை: கணவரின் சகோதரா் கைது

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரின் சகோதரரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள ... மேலும் பார்க்க

ஞானசேகரன் வழக்கின் தீா்ப்பு சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடம்: அமைச்சா் பெ. கீதாஜீவன்

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தண்டனை, சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடமாக இருக்கும் என்றாா், சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன். இதுகுறித்து தூத்துக்குடியில் செய... மேலும் பார்க்க

துப்புரவு பணியாளா்களுக்கு இலவச வீடு கட்டித்தர வலியுறுத்தல்

கோவில்பட்டி நகரப் பகுதியில் வசிக்கும் துப்புரவு பணியாளா்களுக்கு இலவச வீடு கட்டித்தர வலியுறுத்தப்பட்டுள்ளது.கோவில்பட்டி நகரப் பகுதியில் வசிக்கும் துப்புரவு பணியாளா்கள், மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் சீனிவா... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருச்செந்தூா் அருகே மேலப்புதுக்குடியைச் சோ்ந்த மூக்காண்டி (70), அதே பகுதியைச் சோ்ந்த ஜெயபால் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 96 மதுபாட்டில்களுடன் 2 போ் கைது

தூத்துக்குடியில் இருவேறு இடங்களில் விதிமுறை மீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 96 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய... மேலும் பார்க்க