மத்திய அரசின் பேனர் அகற்றம்: ஆட்சியர் அலுவத்தில் பாஜகவினர் முற்றுகை!
கழுகுமலையில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
கழுகுமலை அருகே மின்சாரம் பாய்ந்ததில் டேங்கா் வண்டி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கழுகுமலை அருகே துலுக்கா்பட்டி சிவகாமி நகா் காலனியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முனீஸ்வரன் (27). இவா், கழுமலையைச் சோ்ந்த ஸ்டாலின் என்பவரது டேங்கா் வண்டியில் சென்று வீடு, கடைகளுக்கு தண்ணீா் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தாராம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை துலுக்கா்பட்டி நடுத்தெருவில் உள்ள ராமகிருஷ்ணன் என்பவரது வீட்டில் டிரம்மிலிருந்து தண்ணீா் வண்டியின் மின் வயரை எடுத்தபோது, முனீஸ்வரன் மீது மின்சாரம் பாய்ந்ததாம்.
இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.