செய்திகள் :

கோவை: ஷோரூமில் நின்ற சொகுசு காரை கண் இமைக்கும் நேரத்தில் திருடிய நபர்; சிக்கியது எப்படி?

post image

கோவை, சிங்காநல்லூர் திருச்சி சாலையில் டாடா நிறுவனத்தின் கார் விற்பனை மையம் உள்ளது.

அங்குப் பணியாற்றி வரும் சரவணக்குமார் என்ற ஊழியர், கார்களை ஆய்வு செய்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான ஒரு கார் மாயமானது தெரியவந்தது.

உடனடியாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஒரு மர்ம நபர் காரை திருடிச் சென்றது தெரிந்தது.

கார்
கார்

இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த நபரைப் பிடிப்பதற்காகத் தனிப்படையும் அமைக்கப்பட்டது.

காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்த நபர் விற்பனை மையத்தின் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் தன் பைக்கை நிறுத்திச் சென்றது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, காவல்துறையினர் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம், “இந்த பைக்கை யாராவது எடுக்க வந்தால் எங்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

கர்ணன்
கர்ணன்

நேற்று மாலை அந்த நபர் பெட்ரோல் பங்குக்கு பைக் எடுக்க வந்துள்ளார். பங்க் ஊழியர்கள் அவரைப் பிடித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் அவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் அந்த நபர் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கந்து கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கர்ணன் என்று தெரிந்தது.

அவர் பைக் டாக்ஸி ஓட்டி வரும் நிலையில், கடந்த வாரம் டாடா விற்பனை மையம் சென்று TATA Curvv மின்சார வாகனம் வாங்குவது போல விசாரித்துள்ளார்.

அந்த காரை ஓட்டிப் பார்த்து விரைவில் வாங்குவதாகக் கூறியுள்ளார். காரின் மதிப்பு ரூ.20 லட்சமாகும். அதை வாங்குவதற்கான பணம் இல்லை.

கைது
கைது

இதனால் காரை திருட முயற்சி செய்து, விற்பனை மையம் வந்து காரை பார்த்தார். அதில் சாவியும் இருந்தது. அவர் ஏற்கனவே கார் குறித்து விசாரித்துச் சென்றதால் அங்கிருந்தவர்களுக்குச் சந்தேகம் வரவில்லை. இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கர்ணன், காரை திருடிச் சென்றுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Sanskrit இந்திய மொழிகளின் தாய் என்ற Amit shah மீது ஏன் கோபம் வரவில்லை? - Aazhi Senthil Nathan

கன்னட மொழி தமிழ் மொழியிலிருந்துதான் பிறந்தது என கமல் ஹாசன் கூறியது சர்ச்சையாகியிருக்கிறது. கமல் அந்த கருத்தை தவிர்த்திருக்கலாம் என்கிறார் மொழி சமத்துவத்துக்கான செய்றப்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன். மேலும் பார்க்க

Gaza: ’உலகமே கேட்கும்படி கத்த வேண்டும்!’ - காசா அம்மாக்களின் குரல் கேட்கிறதா உலகத்துக்கு?

காசாவில் நிலவி வரும் போர்ச்சூழலின் காரணமாக, நாட்டில் உணவுப் பஞ்சம் எந்தளவுக்குக் கடுமையாக இருக்கிறது என்பதை பல வீடியோக்கள் மூலம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதனால், கர்ப்பிணிகள் உடலில் ஊட்டச்சத்துக் க... மேலும் பார்க்க

`பொதுத்துறை நிறுவனங்களை தணிக்கை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியா?' - சு.வெங்கடேசன் காட்டம்

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான அறிவிப்பை சி.ஏ.ஜி உடனடியாக திரும்பப்பெற குடியரசுத் தலைவருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து அவர்... மேலும் பார்க்க

கரூர்: "காவிரி கதவணையில் கலைஞருக்குச் சிலை" - செந்தில் பாலாஜி தகவல்

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் 102 இடங்களில் நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட தி.மு.க சார்பில் நடைபெற்றது.கரூர் மாவட்டம்... மேலும் பார்க்க

மது ஒழிப்பு: ``ஆம், அவர்களை மேடையில் வைத்துக்கொண்டும் விசிக-வால் பேச முடியும்!" - திருமாவளவன்

பி.முருகசாமி இயக்கி, ஜூ ஸ்மித் இசையில், லிசி ஆண்டனி, புதுப்பேட்டை சுரேஷ், ராட்சசன் சரவணன் ஆகியோர் நடித்துள்ள படம் குயிலி. இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற... மேலும் பார்க்க

Sindoor: வீடுகளுக்குக் குங்குமம் அனுப்பும் பாஜக; "ஒரு நாடு, ஒரு கணவர் திட்டமா?" - பஞ்சாப் முதல்வர்

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த மாதம் இந்தியா தாக்குதல் நடத்தியது.இத்தாக்குதலை பா.ஜ.க-வினர் கொண்டாடி வருகின்றனர். பா.ஜ.கவினர் இந்த வெற்றியைக் கொண்டாடும் ... மேலும் பார்க்க