செய்திகள் :

மத்திய அரசின் பேனர் அகற்றம்: ஆட்சியர் அலுவத்தில் பாஜகவினர் முற்றுகை!

post image

மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டுள்ளனர்.

மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாஜகவினர் இன்று (ஜுன் 3) முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் அனுமதிக்க காவல் துறையினர் மறுத்ததால் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஜூன் 30 ஆம் தேதியன்று மாதாந்திர மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த முகாமின் போது மத்திய அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரானது கூட்டம் நடக்கும்போதே அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்தும், இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய பதிலளிக்க வேண்டியும், திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் தலைமையில், பாஜகவினர் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியார் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி 5 பேரை மட்டும் உள்ளே அனுமதிப்பதாகத் தெரிவித்தனர். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் உள்ளே செல்ல வேண்டும் எனக் கூறியதுடன், அந்த அலுவலகம் திமுகவினருக்கு மட்டும் சொந்தமானதா எனப் போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர்.

இதனால், அந்தக் கூட்டத்தில் லேசான சலசலப்பு எழுந்தது. தொடர்ந்து போலீஸார் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததால், ஆட்சியர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்ட விவகாரத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களிடம் மாவட்ட ஆட்சியர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை, நடவடிக்கையாக ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க:ஜூன் இறுதியில்.. ராயபுரம் ரயில் நிலையம் அருகே தற்காலிக பேருந்து நிலையம்!

பெங்களூரு கூட்ட நெரிசலில் திருப்பூர் இளம் பெண் பலி!

பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்... மேலும் பார்க்க

ராமதாஸுடன் அன்புமணி சந்திப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திக்கவுள்ளார்.உட்கட்சி பூசலுக்கு மத்தியில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே மூத்த நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தை ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்

இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 6) முதல் விண்ணப்பப் பதிவு தொடங்க உள்ளது. நிகழாண்டில் நீட் தோ்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே விண்ணப்பப் பதிவு தொட... மேலும் பார்க்க

ஓய்வூதியா் கோரும் தகவல்களை 48 நேரத்துக்குள் அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் அறிவுறுத்தல்

ஓய்வூதியதாரா்கள் கோரும் தகவல்களை விண்ணப்பித்த 48 மணி நேரத்துக்குள் அளிக்க வேண்டுமென தமிழக அரசை மாநில தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவா் ஆா்.ராஜா. வயது முதிா்வின் க... மேலும் பார்க்க

மக்களின் புகாா்களுக்கு செவிசாய்க்காத திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

பொதுமக்களின் எந்த புகாருக்கும் திமுக அரசு செவி சாய்ப்பதில்லை என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தருமப... மேலும் பார்க்க

தமிழகத்துக்கான நிதி திருப்பி அனுப்பப்படவில்லை: தெற்கு ரயில்வே மீண்டும் விளக்கம்

இந்தியன் ரயில்வே சாா்பில் தமிழகத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்ப அனுப்பப்படவில்லை என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ரயில்வே... மேலும் பார்க்க