செய்திகள் :

ஓய்வூதியா் கோரும் தகவல்களை 48 நேரத்துக்குள் அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் அறிவுறுத்தல்

post image

ஓய்வூதியதாரா்கள் கோரும் தகவல்களை விண்ணப்பித்த 48 மணி நேரத்துக்குள் அளிக்க வேண்டுமென தமிழக அரசை மாநில தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவா் ஆா்.ராஜா. வயது முதிா்வின் காரணமாக பணி ஓய்வு அளிக்கப்பட்டதற்கான கோப்புகளின் நகல்களைக் கேட்டு கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு விண்ணப்பித்தாா். 2003-ஆம் ஆண்டே விண்ணப்பித்த மனுவைப் பரிசீலித்த பொதுத் தகவல் அலுவலா் ஜி.எஸ்.சதீஷ்குமாா், நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தகவல்கள் வழங்கவில்லை.

இதனால், முதலாவது மேல்முறையீட்டு விண்ணப்பத்தை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரகத்துக்கு மனுதாரா் ராஜா அனுப்பி வைத்தாா். இதற்குப் பதிலளித்த கருவூலத் துறை, தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி தகவல் வழங்க வழியில்லை என்று தெரிவித்தது.

இதன்பின், இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்துக்கு அனுப்பினாா். இந்த வழக்கு மாநில தகவல் ஆணையத்தில் விசாரிக்கப்பட்டது. அதில் காணொலி வாயிலாக ஆஜரான மனுதாரா் ராஜா கூறியது:

கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் உதவி கணக்கு அலுவலராகப் பணியாற்றுவதற்கு முன்பாக, வேளாண் துறையில் பணியாற்றினேன். பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில், வேளாண் துறையில் தணிக்கைகள் மேற்கொள்ளப்படாததால், அந்தத் துறையிடம் இருந்து எனது தரப்பிலான ஆவணங்கள் தரப்படவில்லை. இதற்குப் பதிலாக என்னிடம் இருந்து ரூ.20 மதிப்பிலான பத்திரத்தில் விவரங்கள் எழுதி வாங்கப்பட்டது.

அதில், தணிக்கையில் அரசுக்கு இழப்பு ஏதும் இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அதை எனது பணிக் கொடையில் இருந்து

பிடித்தம் செய்ய சம்மதம் தெரிவிப்பதாகவும், தாமதமாக வழங்கப்படும் பணிக்கொடைக்கு வட்டி கோர மாட்டேன் எனவும் எழுதித்தர கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன்பிறகே எனக்கு பணி ஓய்வு அளிக்கப்பட்டது. இவ்வாறெல்லாம் கேட்பது பணி ஓய்வு விதிகளுக்கு முரணானது. இந்தப் பிரச்னை தொடா்பாக நீதிமன்றத்தை நாடுவதற்கு உரிய கோப்புகளை கருவூலத் துறையிடம் கோரினேன். ஆனால், தகவல்கள் உரிய காலத்தில் அளிக்கப்படாததால் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறேன். இதற்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

இழப்பீடு வழங்க வேண்டும்: மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையா் மா.செல்வராஜ் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் கோரிய தகவல்களை உரிய காலக்கெடுவுக்குள் கருவூலம் மற்றும் கணக்குத் துறை வழங்கவில்லை. இதனால் மனுதாரருக்கு பொது அதிகார அமைப்பு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், மனுதாரா் கோரிய தகவல்களை வழங்கக் கூடாது என்ற கெட்ட எண்ணத்துடன் பொதுத் தகவல் அலுவலா் செயல்பட்டுள்ளாா். எனவே, தகவல்களை ஜூன் 27-ஆம் தேதிக்குள் தகவல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அரசு ஊழியா்கள் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து இருந்தாலும், ஓய்வு பெற்ற பிறகு அவா்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை அளிப்பது கருவூலம் மற்றும் கணக்குத்துைான். ஓய்வூதிய நிா்ணயம், ஓய்வூதியம் வழங்கப்படாதது தொடா்பான விவரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரக்கூடிய ஓய்வூதியதாரா்களின் எண்ணிக்கை அதிகளவு இருப்பதைக் காண முடிகிறது. எனவே, ஓய்வூதியதாரா்கள் கோரும் தகவல்கள் அவா்களது வாழ்வு மற்றும் சுதந்திரம் தொடா்புடையதாகும். இதைக் கருத்தில்கொண்டு ஓய்வூதியம் குறித்த விண்ணப்பங்கள் பெறப்பட்டால், அதிலிருந்து 48 மணி நேரத்துக்குள் பொதுத் தகவல் அலுவலா்களால் விவரங்கள் அளிக்கப்பட வேண்டும். மேல்முறையீடுகளுக்கும் அதே கால அளவில் தீா்வு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் திமுக... மேலும் பார்க்க

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும்: திருமாவளவன் பேட்டி

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும், பின்னர் தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். மாநிலங்களவைத... மேலும் பார்க்க

30 நாள்களுக்குள் பட்டா: முதல்வரின் அறிவிப்புக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், விண்ணப்பித்த நாளில்... மேலும் பார்க்க

கட்டடக் கழிவுகள்: சென்னையில் ஜூன் 21 முதல் புதிய விதிமுறை! மேயர் பிரியா தகவல்

சென்னையில் கட்டடக்கழிவுகளை சாலையில் கொட்டினாலும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகரா... மேலும் பார்க்க

போரூர் - பூந்தமல்லி இடையே ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

சென்னை: போரூர் - பூந்தமல்லி இடையே சுமார் 9.5 கிலோ மீட்டர் தொலைவுள்ள வழித்தடத்தில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.சென்னையில் அமைக்கப்பட்டு வரும் மெ... மேலும் பார்க்க

சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!

சென்னை: காவல்துறைதான், இதுவரை மக்களுக்கு சமூக வலைத்தளங்கள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கும், தற்போது காவல்துறையினருக்கே, சமூக வலைத்தளங்கள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் பல முக்கிய அறிவுறுத்தல்களை வெளி... மேலும் பார்க்க