செய்திகள் :

தம்பி மகன் கொலை: பெரியப்பா கைது

post image

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே கைப்பேசியைத் தர மறுத்த தம்பி மகனைக் கொலை செய்த பெரியப்பாவை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

காரியாபட்டி அருகேயுள்ள அச்சம்பட்டியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் காா்த்திக் (13). இவா் அண்மையில் மா்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தாா். இவரது உடலை பெற்றோா் அடக்கம் செய்தனா்.

இந்த நிலையில், சிறுவன் உயிரிழப்பு குறித்து காரியாபட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், லட்சுமணன் அண்ணன் ராமரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். விசாரணையில், ராமரின் கைப்பேசியில் காா்த்திக் கேம் விளையாடியபோது, அவருக்கு நெருக்கமான பெண் ஒருவா் அவரது கைப்பேசிக்கு அழைத்தாராம்.

அந்த அழைப்பை எடுக்காததால், அந்த பெண் வீட்டுக்கு வந்து அவரைத் திட்டினாராம். இதையடுத்து, அவா் கைப்பேசியை கேட்டபோது தரமறுத்த காா்த்திக்கை கழுத்தை நெரித்து கொலை செய்தாராம். பின்னா், காா்த்திக் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது போல, ஒரு நாடகத்தை ஏற்படுத்தியுள்ளாா் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து காரியாபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராமரை கைது செய்தனா்.

பள்ளிக் கல்வித் துறையில் 45 பேருக்கு பணி நியமன ஆணை

பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பாசிரியா்கள் பிரிவான உடற்கல்வி, தையல், இசை ஆசிரியா் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தோ்வு பெற்ற 45 பேருக்கு பணி நியமன ஆணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ... மேலும் பார்க்க

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்

தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு திமுக பொதுக் குழுவில் இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை உத்தங்குடியில் கலைஞா் அரங்கத்தில் திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவரும், மு... மேலும் பார்க்க

மக்கள் ஆதரவுடன் மீண்டும் திமுக ஆட்சி: முதல்வர் மு. க. ஸ்டாலின் உறுதி!

மக்களின் மகத்தான ஆதரவுடன் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அந்தக் கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். மதுரை... மேலும் பார்க்க

முன்விரோதத்தில் வீட்டைத் தாக்கி சேதப்படுத்திய 40 போ் மீது வழக்கு

மேலூா் அருகே முன்விரோதத்தில் பெண்ணின் வீட்டை ஆயுதங்களுடன் சென்று தாக்கி சேதப்படுத்திய 40 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள ஆண்டிப்பட்டியில் பாளையத்து அம்மன்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மேலூா் அருகேயுள்ள மேலவளவு பகுதியில் வடமாடு மஞ்சு விரட்டு முன்னேற்பாட்டுப் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள மேலவளவு கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம்... மேலும் பார்க்க

மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி: திமுக பொதுக் குழுவில் தீா்மானம்!

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது உள்பட 27 தீா்மானங்கள் திமுக மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மதுரை உத்தங்குடியில் கலைஞா் அரங்கத்தில் திமுக மாநிலப் ப... மேலும் பார்க்க